Monday, January 31, 2005

வலைப்பதிவுகளுக்கு திசைகள் வழங்கும் பரிசுகள்

2005ம் ஆண்டின் சிறந்த வலைப்பதிவு (Best Blog of the year)க்கு ஒரு பரிசு, இந்த ஆண்டு (2005) முழுவதும் தொடர்ச்சியாக வலைப்பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் பத்துப் பேருக்குப் பரிசு, எனப்பரிசுகள் காத்திருக்கின்றன. அத்துடன்ஒவ்வொரு வாரமும் வலைப்பதிவுகளில் கருத்தைக் கவர்ந்த சிலவற்றைத் தொகுத்து வெளியிடவும் திசைகள் விரும்புகிறது.
விவரங்களுக்கு பிப்ரவரி திசைகள் இதழைப் பாருங்கள் (http://www.thisaigal.com)

3 comments:

Vijayakumar said...

எழுத்துக்களுக்கு ஆர்வம் வளர்க்கும் ஒரு நல்ல முயற்ச்சி.

Narain Rajagopalan said...

ம்ம்...தயாராகி விடுகிறேன் நான். ஒரு சிறு சந்தேகம், ஏன் பத்துப் பேருக்கு மட்டும் பரிசு ? (ஸ்பான்ஸர் வராது என்று சொல்லி விடாதீர்கள் ;-) ) ஏன் இதனை பல்வேறு பிரிவுகளாக பிரித்து பரிசுகள் தரக்கூடாது ? (உதா. இலக்கியம், அரசியல், சினிமா, சுவாரசியமானவை இப்படி)இதன் மூலம் நிறைய பேர்களின் முயற்சிகள் தெரியவரக்கூடுமல்லவா)

சற்றும் சம்பந்தமில்லாத ஒரு பின்னூட்டம். தங்களின் "கத்தி எடுக்க தயங்குகிறாரா மன்மோகன் படித்தேன்" .... இந்த வார பிசினஸ் டுடெ பாருங்கள், உங்கள் பதிவிற்கான பதில் அதிலிருப்பதுப் போல் தெரிகிறது.

சுபமூகா said...

அருமையான செய்தி.

வலைப் பதிவுகள் மேன்மேலும்
சிறக்கும் என்பது திண்ணம்.

அன்புடன்,
'சுபமூகா'