Saturday, July 14, 2007

அன்புள்ள பெயரிலிக்கு.....

அன்புள்ள ரமணீதரன், பெயரிலி, அலைஞன் எனப் பல பெயர்களால் அறியப்படும் பெயரிலி என்ற நண்பருக்கு,



என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப்
பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்.


முதலில் உங்களுக்கு நன்றி.என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை, எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன், வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்களே, அதற்காக நன்றி.


நீங்கள் மெய்யாகவே விளக்கங்களை வேண்டி அந்தக் கேள்விகளைத் தொடுத்திருந்தால்,அதை என் பதிவிலோ அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பியோ கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்களின் உண்மையான அக்கறை
அவற்றுக்கான பதில் அல்ல. வெறுமனே அலை எழுப்புவது. அலைஞன் அல்லவா நீங்கள்?


என்றாலும் விளக்கங்கள் கொடுப்பதில் எனக்கு ஏதும் சிரமம் இல்லை. நேரப் பற்றாக்குறை தவிர.


முதலில் சில கருத்துக்கள்:
1.இந்த எட்டுப் போடுகிற விளையாட்டு என்பதே ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களை தன் கோணத்திலிருந்து எழுதுவதுதான். (உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால், "மிகத்தீவிரமாக இணையத்திலே எட்டுக்குனியா பரவும் இக்காலகட்டத்திலே 'sexed up self claims' நோய்க்குறி") வரலாறு எழுதுவ்து விளையாட்டான விஷயம் அல்ல என்றே நான் கருதுகிறேன். அப்படியிருக்க நீங்கள் ஏன் நான் ஏதோ வரலாற்றைத் திரித்துவிட்டதாக அல்லது வரலாற்றை மறைத்து விட்டதாக அல்லது வரலாற்றுப் பிழை செய்துவிட்டதாக ஆவேசப்படுகிறீர்கள்?


2.நான் அந்தப் பதிவில் நான் என் Formative years, எனக்கு கவியுலகோடு ஏற்பட்ட அறிமுகம்,எழுத்துலகோடு ஏற்பட்ட அறிமுகம், பத்திரிகை உலகோடு ஏற்பட்ட் அறிமுகம், அரசியல் உலகோடு ஏற்பட்ட அறிமுகம், என என் பல துவக்கங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதைப் போல,கணினியுடனும் இணையத்தோடும், வலைப்பதிவுலகோடும் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.அதில் எந்த இடத்திலும் நான் இணைய அறிஞர் என்றோ, இணைய முன்னோடி என்றோ குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க நீ என்ன பெரிய..... என்ற கேள்விக்கோ, கேலிக்கோ அவசியம் என்ன?


"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்கள். வரலாற்றைத் திரிப்பவனாக நீங்கள் கருதும் என் கருத்தை விட்டுத் தள்ளுங்கள். ஆனால் இந்தத் தரவுகளைப் பாருங்கள்:


தரவு-1
"முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words,
Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது"
மேலே உள்ளது தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து பெறப்படது. " கணினியில் தமிழ் என்ற பக்கத்தில் இணையத் தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி என்ற துணைப்பிரிவில் இந்தத் தகவல் காணப்படுகிறது.


தரவு-2


"Naa Govindaswamy passed away in Singapore, on 26 May 1999 at the relatively young age of 52. He was one of the pioneers of the Tamil digital renaissance of the 20th century. Tamils living in many lands have lost an enthusiastic and gifted worker who had contributed much to nurture their growing togetherness.
The print revolution brought Tamil from the ola leaves to paper, from the select few literati to the many. The digital revolution is bringing Tamil from paper to the computer and the internet. U.V.Swaminatha Iyer and Thamotherampillai heralded the Tamil renaissance in the 19th century. Both Naa Govindasamy and Kuppuswamy Kalyanasundaram have made important contributions to the Tamil digital renaissance of the 20th century."


இது தமிழ்நேஷன் என்ற வலைப்பக்கத்தில் காணப்படும் குறிப்பு: காண்க
http://www.tamilnation.org/hundredtamils/naag.htm


தரவு-3
"உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!
1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.
இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம்
ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்."
இது 2004ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத் தமிழ்மாநாட்டில் ஆலபர்ட் என்பவரால் அளிக்கப்பட்ட நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி என்பவ்ரின் கட்டுரையிலிருந்து.


தரவு-4


"Tamnet formerly known as Tamil Network Publishing House, was established in 1996 by Mr Naa Govindasamy (1946 - 1999), who is more fondly remembered as the Father ofTamil internet."-இது கணியன் தளத்திலிருந்து (http://www.kanian.com/profile.htm)


தரவு-5


"தமிழ் இணையத்திற்கு முன்பாகவே தமிழ் எழுத்துரு முயற்சிகள் சிங்கப்பூர் நா.கோ மற்றும் இன்ன பிற ஆர்வலர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது..."
இது சகவலைப்பதிவர் அலெக்ஸ் பாண்டியன் ஜீன் 14, 2005ல் எழுதியது.இங்கு அவர் தமிழ் இணையம் எனக்க்குறிப்பிடுவது தமிழ்,நெட் டைத்தான்.தமிழ்.நெட் பற்றி நன்கு அறிந்தவர் அதைக் குறித்து விரிவாக தனது பதிவில் மூன்று பகுதிகளாக எழுத்யிருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன் 97 அல்லது 98லிருந்து இணையத்தில் உலவி வருபவர் எனச் சொல்ல முடியும். காண்க: http://alexpandian.blogspot.com/2005/06/1.html


என்னுடைய கேள்வி எல்லாம், மேலே உள்ள எல்லாத் தரவுகளும், என் வலைப்பதிவு எழுதப்படுவதற்கு முன்னரே இனையத்தில் இடம் பெற்றிருந்தவை. இந்த இடங்களுக்குச் சென்று இதற்கு முன்னர்,
"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்களா என்பதுதான். உங்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் அலலது நிலைநாட்டும் ஆர்வம் மெய்யாகவே இருந்திருக்குமானால் நீங்கள் அதைச் செய்திருப்பீர்கள். ஆனால் உங்கள் நோக்கம் அதுவல்ல. உங்கள் ஆர்வம் அலை எழுப்புவதில்;ஆறுமுக நாவலர் குறித்து நான் வெளியுட்டுள்ள சில கருத்துக்கள் காரணமாக என் மீது ஏற்பட்டுள்ள மனச்சாய்வின் காரணமாக, காழ்ப்பின் காரண்மாக என் மீது சாணி எறிவது.


சரி ஏன் நா.கோ.முதலில் தமிழை இணையத்தில் ஏற்றியவராகக் கருதப்படுகிற்ர்?


நா.கோவே தனது முயற்சி என்ன என்பதை விளக்குகிறார்:
" Singapore is a multilingual and a multiracial country. English, Chinese, Malay and Tamil are the official languages. Most of the government and public documents are published in these four official languages.
However, until recently, it was not possible for the Chinese and Tamil languages to be disseminated through the World Wide Web on the Internet.


In 1994 Dr Tan Tin Wee, my research collaborator initiated work in this area while he was the head of Technet Unit, the first Internet service provider for Research and Educational Institutions in Singapore. Technet Unit was directly under the supervision of the Computer Centre of the National University of Singapore. (Technet Unit has since been commercialised to become Pacific Internet, one of the three ISPs for Singapore. The others are Singnet and Cyberway.) By mid-1994, Technet Unit initiated the Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official languages to be represented in the INFOMAP.


Since English and Malay are using the Roman script, displaying these two languages on the WEB was not a problem. By the end of 1994, Technet had successfully implemented an Experimental Chinese WEB server in Singapore. So the problem of displaying the Chinese script on the Web was solved. However, displaying Tamil script on the Web, and communicating through Tamil on Internet was a problem. There was no Tamil Information System on the Internet which provides a display system in Tamil and English simultaneously on the Text Mode using a Tamil-English single font file. There were a few servers, which were providing Tamil script using GIF image files.
Tamil Eelam Page (http://www.eelam.com/) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit
font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.

So there was a need to develop a Tamil Internet System which should go

beyond Web display.

In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time.


At that time, on my own, I was in the process of developing True Type fonts and a Tamil software for Windows Applications (Kanianப)�ப Tamil Software). As the service provider arm of the Technet was sold to a private consortium and renamed Pacific Internet in September 1995, the nascentTamil Internet Research was inherited by the newly formed Internet Research and Development Unit (IRDU). This Research Unit was funded by the National Science and Technology Board (NSTB ) (http://www.nstb.gov.sg/) of Singapore. Mr Leong Kok Yong, just graduated from the Nanyang Technological University, joined IRDU, and became one of the key member for the TamilWEB project.


Objective
During the Technet period, when Dr Tan and I, conceptulised the TamilWEB Project. We had a very clear objective.That is: to develop a bilingual font system for The Total Internet Communication in the Tamil language. That means, the system that we intended to develop:


should provide display of Tamil & English Text simultaneously on the Internet Applications. (Web Browsers & Email sofware packages.)

Tamil and English text should be easily communicated and retrieved in Plain Text.

should work across Platforms. (PC, Mac & Unix)

should be searchable in Tamilshould let the user type Tamil in the Web browser's Forms, and the typed word should be seen in Tamil.

Should allow the user to read Tamil & English in terminal emulation mode (telnet).


Prototype Testing, Preview and Official launch


The prototype of our system was tested during the launch of PoemWEB. PoemWeb is an electronic selection of representative poems from the four official languages, from the book , Journeys: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) which was published by The Centre for the Arts, National University of Singapore. This book was launched by H.E. Mr Ong Teng Cheong, President, Republic of Singapore on Friday 27 Oct 1995.
The preview of the first phase of TamilWEB project was shown to the public and to the Press at the Internet for Everyone 1995 at Suntec City Exibition Hall during 13 December 1995. TamilWeb was officially launched by the Honourable Member of Parliament, Dr Ong Chit Chung (Chairman, GPC for Education and MP for Bukit Batok) on 2 February 1996"


இது கோவிந்தசாமி செப்டெம்பர் 14 1998ம் ஆண்டு, புனேவில் நடைபெற்ற SAARC Conference on Extending the Use of Multilingual & Multimedia Information Technology என்ற மாநாட்டில் அளித்த Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற கட்டுரையிலிருந்து. இதன் பிரதியை http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm என்ற
இடத்தில் காணலாம்


நீங்கள் கணியன் இதழ்களை மனதில் கொண்டு பேசுகிறீர்கள் எனபது, "கணியன் இதழ் தமிழ்நெட் எழுத்துருவிலே தொடங்கமுன்னரே, மயிலையிலே இணையத்திலே வலைப்பக்கங்கள் இருந்தன " என நீங்கள்
குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்கிறேன். நான் கணியன் இதழ்களை அடிப்படையாகக் கொண்டு என் கருத்தைப் பதிந்திருக்கவில்லை. நான் குறிப்பிடுவது சிங்கப்பூர் அரசு மேற்கொண்ட முயற்சிகளையும், அதில்
கோவிந்தசாமிக்கு இருந்த பங்களிப்பையும்.


தமிழ் நெட் 1995ல் துவங்கப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது: "இணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார்."


சிங்கை அரசின் முயற்சிகள் 1994ல் துவங்கிவிட்டன. "By mid-1994, Technet Unit initiated the Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official languages to be represented in the INFOMAP." (இதில் he என்பது Dr,டான் டின் வீ யைக் குறிக்கிறது என்பதை மேலே உள்ள கோவிந்தசாமியின் கட்டுரையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்)


தமிழ் நெட் எழுத்துரு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் தமிழ் நெட் மடலாடற்குழுவில் எழுதியவர்கள் முத்து நெடுமாறனின் எழுத்துருவைப் பயன்படுத்தியதாக விக்கி பீடியா குறிப்பிடுகிறது: "முரசு அஞ்சல்
எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது."


மயிலை எழுத்துருவில் இணையப்பக்கங்கள் இருந்தன என்பதும் அதை நா.கோ தன் கட்டுரையில் சுட்டியிருக்கிறார் என்பதும் உண்மைதான்.ஆனால் அவற்றின் limitaionகளையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.மயிலை எழுத்துருவை வடிவமைத்தவரும், மதுரைத் திட்டத்தை நிறுவியவருமான டாக்டர். கல்யாணசுந்தரம், 1999ல் தகுதர எழுத்துக்களுக்கும், பின் 2003ல் யூனிகோடிற்கும் தன் தளத்தை மாற்றிக்கொண்டுவிட்டார் என்பதுவே அதன் limitationகளைச் சுட்டப் போதுமானது. "மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மாணிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்." என் மதுரைத் திட்டத்தில் காணப்படும் குறிப்பு சொல்கிறது.


தகுதரத்தின் வரைவு முன்வடிவம் டிசம்பர் 1997ல் வெளியிடப்பட்டது. ('TSCII stands for Tamil Standard Code for Information Interchange. It is a character encoding standard for Tamil on computers. Read the draft proposal released in December 1997, for a detailed discussion. The current draft is labelled, TSCII 1.7" இந்தக் குறிப்பை http://www.tamil.net/tscii/tscii.html என்ற இடத்தில் காணலாம்)



நா.கோ சிங்கப்பூர் அரசின் உதவியுடன், கணியன் பூங்குன்றன் பாடலுடன் வெளியிட்ட இணையதளம் 1995 அக்டோபரிலேயே வலையேறிவிட்டது.



"நீங்கள் எப்போது உத்தமத்திலே சேர்ந்துகொண்டீர்கள் என்பதையேனும் காலவரையறைப்படி சரியாக நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. .....நீங்கள் சேர்ந்து கொண்டது மிக மிகப் பின்னான காலகட்டத்திலே. அனைத்தும் நடந்து
முடிந்து. "


ஆமாம். அதற்கென்ன இப்போது. நான் உத்தமத்தின் ஆரம்பகால உறுப்பினர், நிறுவனர் என்றா என் பதிவில் சொல்லியிருக்கிறேன்?
ஆனால் நான், உத்தம மாநாடுகளுக்கு முன்னோடியாக அமைந்த, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் 1997ம் ஆண்டு மே 17-18 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாட்டில் (அப்போது அது Tamilnet 97 என்றழைக்க்ப்பட்டது) அமைப்புக் குழுவினரின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன். அது குறித்து வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில் காணப்படும் வாசகங்கள் இவை:
"The 2 hour-long discussion session on the second day of the symposium came to a fruitful ending. The discussion panel (a total of 11 members) was led by Sujatha and included N. Anbarasan, S Kuppuswami, ST Nandasara, Kuppuswamy Kalyanasundaram, Malaan, Harold Schiffman, Vasu Renganathan, Muthelilan Murasu Nedumaran, Naa Govindasamy and Tan Tin Wee. The topics discussed includes -
Increasing Tamil Content Worldwide
Keyboard Diversity
Encoding Standards
Standardization of Tamil Websites and WebPages
Work to be done/Time Frame
Next Symposium - TamilNet'98
இதனை http://www.tamilnation.org/digital/tamilnet97/Tamilnet97.htm என்ற இடத்தில் பார்க்கலாம்.
இந்த மாநாட்டின் படங்கள் உத்தமம் இணையதளத்தில்இருந்தன.அண்மையில் அந்தத் தளம் சீரமைக்கப்பட்ட போது அவை நீக்கப்பட்டுவிட்டன.


"உத்தமம் வருவதற்கு முன்னாலே அதற்கு முன்னான ஆரம்பக்குழுக்களும் வெப்மாஸ்ரர் மின்னஞ்சற்பட்டியல் விவாதங்களிலும் நீங்களிருந்தீர்களா?" என்பது உங்களது மற்றொரு கேள்வி.
பதில்: இல்லை.அப்படி இருந்ததாக இந்தப் பதிவில் மட்டுமல்ல நான் எங்கும் குறிப்பிடவில்லை.முதலில் நான் இணைய அறிஞர் அல்ல்.இணையப் பயனர்.97ல் நடந்த மாநாட்டிற்குப் பிறகு, எழுத்துருக்களைத் தரப்படுத்துவது
பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்து விட்ட்ன. 1999ல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் வரவேற்புரையில் முரசொலி மாறன் குறிப்பிட்டது போல, "இன்று சுமார் 350 மென்பொருள்கள்
கணிப்பொறியில் உலாவந்து கொண்டிருக்கின்றன். இது உண்மையிலேயே பெருமைக்குரிய செய்திதான்.ஆனால் ஒவ்வொருவரும் ஒரு தமிழ் வடிவக் குறியீட்டு முறையைக் கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது -
ஒவ்வொருவரும் தனித்தனி அலைவரிசையில் ஒலி பரப்புவது போல.)விளைவு என்ன? இன்று இண்டர்நெட் இணையத்தில் 350 "தமிழ்கள்" இடம்பெற்றிருக்கின்றன. அதாவது - ஒரு மென்பொருளில் தயாரிக்கப்பட்ட
தமிழ்ச் சொற்களை மற்றொன்று ஏற்றுக்கொள்ளாது. இதனால் கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் தமிழர்கள் தனித் தனித் தீவுகளாக தொடர்பின்றி நிற்கிறார்கள்"


நான் மென்பொருள் வல்லுநர் அல்ல. இந்த பிரசினைக்குத் தீர்வை முன்மொழியக் கூடிய தொழில்நுட்ப அறிவு என்னிடம் இல்லை. எனவே எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற மனநிலையில் ஒதுங்கி இருந்தேன். அதை என் வலையுலக நண்பர்க்ளிடமும் தெரிவித்து விட்டேன். பின்னால் எல்லாம் முடிந்து (99 மாநாட்டிற்குப் பின்னும் சர்ர்ச்சை தொடர்ந்து கொண்டுதானிருந்தது) யூனிக்கோடின் வருகைக்குப் பின்னர்தான்
இணையத்தில் தமிழ் பற்றிய முயற்சிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். நான் தகவல் பரிமாற்றத் (Communication) துறையைச் சேர்ந்தவன். ஆளுக்கொரு எழுத்துரு வைத்துக் கொண்டு நான் எழுதுவது உனக்குப் புரியாது என்று சர்ச்சித்துக் கொண்டிருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை?


"மைக்ரோஃஸொப்டின் ஒருகூற்றினைத் தமிழ்ப்படுத்தும் நோக்குடன் இறங்கியபோது (இதைக்கூட தன்னார்வத்தொண்டெனச் சொல்லிவிட முடியுமாவெனத் தெரியவில்லை)"


சந்தேகமே வேண்டாம். அந்த முயற்சிக்காக நான் ஒரு பைசா, சதம், சென்ட், டாலர், எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.பொருளாகவும் பெற்றுக் கொள்ள்வில்லை. அவர்கள் ஒரு மென் பொருளை அளிக்க முன் வந்த போதுகூட அதை விலை கொடுத்துத்தான் வாங்கிக் கொண்டேன். முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டாகத்தான் செய்தேன்.இரவு 10 மணி செய்தி அறிக்கை ஒளிபரப்பான பின் வீடு திரும்பி, இரவு 12 , 1 மணிவரை இதில் கவனம் செலுத்திதான் அந்தப் பணியை செய்து முடித்தேன். தமிழ் ஆர்வம் உங்களுக்கு மட்டும்தான் உரியதா? இந்த அணில்களும் முதுகில் மண் சுமக்க முடியும்.


கணிச் சொற்களை நான்தான் முதலில் செய்தேன் என்றும் எங்கும் சொல்லவில்லை. நான் மேற்கொண்ட முயற்சிக்கு முன்னரே. பல அகராதிகள் வழக்கில் இருந்தன என்பதையும் நானறிவேன். நான் சொல்லியிருப்பதெல்லாம் நான் அந்த முயற்சியில் பங்களித்தேன் என்பதைத்தான்.



யார் யார் எப்போது வலைப்பதிவுகள் துவக்கினார்கள் என்பதெல்லாம் அவரர்கள் profile பக்த்திலேயே இருக்கிறது. (அப்போது எல்லோரும் பிளாக்கரில்தான் துவங்கினார்கள்) யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.


இனி 'சுதேசமித்ரன் பாரம்பரியம்' பற்றி:


உலகில் எந்த வரலாறுமே எழுதுபவரின் பக்கச் சார்போடுதான் எழுதப்பட்டு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. 1857ல் நடந்த்து ஆங்கிலேயர்கள் பார்வையில் சிப்பாய் 'கலகம்'. இந்தியர்களுக்கு அது முதல் சுதந்திரப் போர்.



தமிழ் இலக்கிய வரலாறும் இதற்கு விலக்கல்ல. தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர் வ்.வே.சு எனவும் இல்லை பாரதி எனவும், வட்டுகோட்டை ஆர்னல்டு என்ற சதாசிவம் என்றும் அதற்கும் முன்னரே சிங்கப்பூர் மக்தூம் சாய்பு எழுதிவிட்டார் எனவும் வாதங்கள் உண்டு.தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் இல்லை, அது ஆதியோர் அவதானி என்ற கவிதை வடிவில் எழுதப்பட்ட நாவல்தான் எனச் சிட்டியும் சிவபாத சுந்தரமும் பிரிட்டீஷ் மியூசியத்திலிருந்த பிரதி ஒன்றைத் தூசி தட்டி எடுத்து நிறுவினார்கள். ஆனால் அண்மையில் கூட, இதை ஏற்க மறுத்த கி.ராஜநாராயணனுக்கும் எனக்குமிடையே மேடை ஒன்றிலேயே
பகிரங்க மோதல் நடந்தது.



சுதேசமிதரனுக்கு முன்பாக இலங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் தமிழ்ப் பத்திரிகைகள் இருந்திருக்கலாம். "மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: "(கடந்த 130 ஆண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது
காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" என முல்லை இராமையாவை
மேற்கோள் காட்டி மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம், என்ற கட்டுரையில் ரெ. கார்த்திகேசு எழுதுகிறார்.
(காண்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=25961&mode=linear) ரெ.காவின் கட்டுரை 2007ல் எழுதப்பட்டதாக வைத்துக் கொண்டால், மலேசியாவின் இதழியல் வரலாறு 1877ல் துவங்குவதாக ஆகிறது. முல்லை இராமையா இதை எழுதியது எப்போது எனத் தெரியவில்லை. அது நிச்சியம்
ரெ.கா எழுதியதற்கு முன்னர்தான். அப்படியான்ல் மலேசியாவின் இதழியல் வரலாறு 1877க்கு முன்பு கூடத் துவங்கியிருக்கக்கூடும்.


நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு மொழியில் இதெல்லாம் இயல்பானது. அதே போல வரலாறு எழுதுகிறவர்கள் அவர்களுக்குரிய சார்புகளோடுதான் எழுதுகிறார்கள். அவரவர் சார்பு அவரவர்களுக்கு;



உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள முத்தையாவின் மேற்கோளையே எடுத்துக் கொள்வோம்:
முத்தையாவின் கட்டுரையில் உள்ள் ராஜவிருத்தி போதினி, தினவர்த்தமானி, சேலம் தேசாபிமமனி பற்றியவாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தடித்த எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.(Emaphasis முத்தையாவினுடையது அல்ல, என்று கூட நீங்கள் குறிப்பிடவில்லை)



அதே முத்தையா அதே கட்டுரையில் எழுதியுள்ள வரிகளை வாசிப்பவனின் கவனத்திலிருந்து ம்றைத்துவிட்டீர்கள் அவை இவை:


When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his partner that he could not wage his impassioned campaigns for social reforms, he made the Swadesamitran his full-time business. Operating from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly paper, then, in 1899, the first Tamil daily. It was to enjoy this status for 17 years - and even thereafter did not meet any real challenge till Swararajya started in 1925, Tamil Nadu in 1927 and Dinamani in 1934, but they too were unable to shake the Swadesamitran's primacy till the 1950s. (இதில் தடித்த எழுத்துக்களில் பகுதி என்னால் இடப்பட்டது)


எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள முத்தையாவிற்குமே சுதேசமித்திரன்தான் முதல் தமிழ் நாளிதழ். அதை ஏன் நீங்கள் மறைத்துவிட்டீர்கள்? இது என்ன பாரம்பரியம்?


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தக் குறிப்பை நீங்கள் 'நம்பிக்கைக்குரியது' அல்ல எனக் கருதும் இந்து நாளிதழிலிருந்தே எடுத்திருக்கிறீர்கள்!நம்பிக்கைக்குரியதாக இல்லாத ஒரு நாளிதழில்
வெளியாகும் ஒரு நறுக்கை நம்பி நீங்கள் விவாதத்தைக் கட்டமைப்பது விநோதமாக இருக்கிறது. அதை நம்பித்தானே அதை இங்கு பயன்படுத்துகிறீர்க்ள்?


உங்களது இந்த ஒரு செயலே இந்து நாளிதழ் நம்பிக்கைக்குரியது என நிரூபிக்கும். விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் மீது உலகில் எத்தகைய நம்பிக்கை நிலவுகிறது என்பதை அவை எத்தனை நாடுக்ளில் தடை
செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கிட்டாலே போதுமானது.


பின்னூட்டங்களில் (உங்களுக்கு அவை பொன்னூட்டமாக இருக்கலாம்) மட்டையடித்துக் கொண்டிருக்காமல், ஆக்கபூர்வமாக ஏதாவ்து செய்யலாமே?


நீங்கள் ஏன் ஒரு வரலாறு- உங்கள் சார்புடனேயே இருக்கட்டும்- எழுதக்கூடாது?

29 comments:

லக்கிலுக் said...

//விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் மீது உலகில் எத்தகைய நம்பிக்கை நிலவுகிறது என்பதை அவை எத்தனை நாடுக்ளில் தடை
செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கிட்டாலே போதுமானது.//

விடுதலைக்கு ஆயுதவழியில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் பிரசுரங்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதால் அவை நம்பிக்கைக்குரியது அல்ல என்ற உங்கள் கூற்று எனக்கு சரியாக படவில்லை.

நாளையே தமிழீழம் மலர்ந்துவிட்டால் அப்பிரசுரங்கள் மீதான தடை நீங்கிவிடக்கூடும் என்ற சாத்தியத்தை உணர்ந்திருக்கிறீர்களா?

தடை போடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவையும் அல்ல.. தடை செய்யப்படாத கருத்துக்கள் அனைத்தும் மெய்யானவையும் அல்ல என்பது என் கருத்து.

சிவபாலன் said...

சார்,

நல்ல விளக்கம்!

Anonymous said...

அன்புள்ள மாலன்

உங்கள் கட்டுரையும் அதற்கான எதிர்வினைகளும் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.

வரலாறு குறித்து நீங்கள் குறிப்பிட்டுள்ளவை உண்மையே. எது முதலாவது என்பது குறித்த சர்ச்சைகள் எத்தகைய நிறுவுதலாலும் கூட அறுதியாக உறுதிப் படுத்த இயலாத நிலையில் தான் இருக்கின்றன. அவரவர் மனச் சாய்வுகள் எல்லா நிலையிலும் வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது வந்து விழும் விடுதலைப்புலிகள் பற்றிய கருத்துக்களை ஒரு ப்த்திரிகையாளர் என்ற நிலையில் உங்களுக்கு சொல்லும் உரிமை உள்ளதாகக்கூட இருக்கலாம். ஆனால் இன்று உலகில் (பெயரிலி கூறியது போல அகதியாகவும் அதிதியாகவும்) பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் புண்படுத்தும் வரிகள் அவை. வெறும் பெயரிலியின் உணர்வுகளாகவே நீங்கள் அதைப் பார்த்து மீண்டும் அதே தவறைச் செய்து கொண்டுள்ளீர்கள் எனக் கருதுகிறேன். இவற்றை நீங்கள் வரலாறு என்று சொல்லி சமாளித்து விட முடியாது. தமிழனின் உணர்வு என்று சொல்லும்போது அதில் ஈழத் தமிழனின் உணர்வையும் உரிமையையும் கருத்தில் கொண்டாக வேண்டும். விடுதலைப்புலிகள் நியாயமானவர்களா என்ற இந்திய மனோபாவ விவாதங்கள் உலகளாவிய ஈழத்தமிழனுக்கு உவப்பானதாக இல்லை. குறைந்த பட்சம் அது குறித்து நாம் பேசாமலாவது இருக்கலாம்.

மற்றவர்களின் உணர்வுகள் பற்றி பிரச்சினை இல்லை. பேசுவது எனது உரிமை என்று சொல்லும் பட்சத்தில் மேலும் சொல்ல ஒன்றும் இல்லை.

Anonymous said...

சும்மா நச்சுன்னு இருக்கு உங்க விளக்கம்.

வவ்வால் said...

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல வரலாற்று ரீதியில் நடந்தவற்றைப் பார்த்தால் பல பக்கம் வரும், பதிவு செய்வோரின் திறன், நேர்மை பொறுத்து உண்மையின் முகம் மாரும். இன்னும் சொல்ல போனால் உண்மை என்பதே இல்லை அதற்கு சமிபமாக எதோ ஒன்று தான் அகப்படும்.

உங்கள் இருவரின் அலசல் மூலம் பல மாறுப்பட்ட கோணத்தில் இணையதமிழ் வரலாற்றை அறிந்து கொண்டது தான் பலன்!

எத்தனை பார்வை எத்தனைகோணம்!

selventhiran said...

மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது.

RamaniKandiah said...

அன்புள்ள மாலன்:
முதலிலே சுருக்கமாக நீங்கள் இங்கு மேலேயும் என் இடுகையின்பின்னும் எழுதியிருப்பதன் மீது:

உங்கள் நேரம் செலவழித்து, பதிலிட்டதற்கு மிகவும் நன்றியெனக் கூறி அதற்கான பதில் செவ்வாயின் - (செவ்வாய்க்கிழமை)- பின்னாலே குறைந்தது இரண்டு தனி இடுகைகளாக - தமிழ்க்கலையிலக்கியவரலாறு, தமிழிணைய வரலாறு, புலி-ராம் பொருமல் மீது-, த் தருவேன் என்றெழுதியும் இணையவரலாறு குறித்து ஏற்கனவே நிகழ்வுகளை, அவற்றினை நிகழ்த்தியவர்களின் மூலமாகவும் அதன் பின்னால் தொகுப்பாகவும் தர சென்றாண்டே நண்பர்கள் சிலர் திட்டமிட்டு, இப்போது ஆரம்பகட்டமாகச் செயற்படுத்தவும் தொடங்கிவிட்டதையும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் சொல்ல முன்னாலேயே நான் என் பதிவின் நெற்றியிலே "not a weblog, but an optimized ego-engine" போட்டு விட்டேன் (ஒரேயோர்"உண்மைமனிதனின் கதை" ;-)) என்பதையும் விளக்கி நான்கு பந்திகளிலே எழுதின பின்னூட்டத்தை புளொக்கரின் பின்னூட்டப்பெட்டி முன்பக்கத்துக்கு எதேச்சையான தட்டுதலே ஓடித் தின்று விட்டதால், இப்போதைக்கு இந்த ஒரு பந்தி-ஒரு வசனப்பின்னோட்டம்.


இரண்டாவது, பின்னூட்டம் இடுகை தோன்றிய பதிவிலேயே இடுவதைக் குறித்து -

பொதுவாக, சில பதிவுகளிலே நான் பின்னூட்டமிடுவதில்லை. அதற்குப் பதிவினையிட்டவர் மட்டும் காரணமில்லை. பின்னூட்டங்களுக்காகப் பின்னாலே வருகின்றவர்களும் முக்கியகாரணமாகிவிடுகின்றது. பின்னாலே வருகின்றவர்கள் முக்கிய காரணமென்றால், அதைவிட முக்கிய காரணம், (நான் பின்னூட்டமிட்டால், அதன் பிறகு) பின்னூட்டமிட வராமற்போகின்றவர்கள். இவன் ஏதோ குதர்க்கமாகப் போட்டிருக்கிறான், ஏதோ சண்டைக்குத்தான் அடிகோலுகின்றான் என்பதாக -நீங்கள் கில்லியிலே வலைப்பதிவுச்சிறப்புபார்வையிலே, சென்ற இடுகையிலே சுட்டியதுபோல - நமக்கேன் வம்பென்று இப்போதைக்கு "வாசித்ததாலே பயன்பெற்றோம்" வாழ்த்தினைச் சொல்லாமல் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று நகர்ந்துவிடுகின்றவர்களே அதிகம். வம்புக்கென்றே தொடங்கும் இடுகைகளிலே அப்படியான பின்னூட்டங்கள் இடுவதிலே ஏதுவிதமான சிக்கல்களுமில்லை - அதிகம் வாழ்த்து, வருக, கண்டோம்+களிகொண்டோம் பின்னூட்டங்கள் ஆங்கு வரப்போவதில்லை. ஆனால், எட்டு குனியா கொண்டாட்டப்பதிவுகளிலே அது பொருத்தமாகவிராது. கோவிந்தசாமி குறித்து, டாக்டர் என நீங்கள் எழுதியதற்கும் நேரே உங்கள் பதிவிலேயே பதிலைத் தராததற்கு அதுவே காரணம். (அவர் பேராசிரியரா என்பதையும் கேட்டு மொட்டந்தலையிலே மயிர் புடுங்கும் வேலையை நான் சொல்லை வரையறுத்துத் தொடங்கப்போவதில்லை. பெரிய ஆசான்கள் பேராசிரியர்கள் என்றவிதத்திலே பதில் வந்தாலும் அதிலேதும் ஆட்சேபணையில்லை). மறைமுகமாக நின்று இராமன் வாலியைக் கொன்றதுபோலல்ல அத்தாக்குதல். "அசுவத்தாமா (என்ற யானை) இறந்தது" என்று வரும் உத்தமதர்மபுத்ர-நாகரீக வஞ்சப்பதிவுகளுக்குக்கூட அவற்றுக்கு கொண்டாட்டப்பின்னூட்டங்கள் வருமானால், பின்னூட்டமிட்டு வந்துண்டு போகும் பிறர்மகிழ்வைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை. வேண்டுமானால், இந்த இடுகைக்கு இதன் பின்னால் வரும் பின்னூட்டங்களினையும் (சொல்லியிருக்கிறேனே என்று அசாதரணத்தனம் அம்மணிகள், தம்பிகள் பண்ணாவிட்டால் :-)) முன்னைய உங்கள் இடுகைகளுக்கான பின்னூட்டங்களையும் தொகை எண்ணி ஒத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காக, சொல்வதை மறுத்துச் சொல்ல வேண்டியிருக்கும் தேவையிருப்பின், சொல்லாமலிருப்பதுமில்லை. சொந்தப்பதிவிலேயே சொல்லிக்கொள்ளலாம். இது கருத்தை முன்வைத்தவருக்குப் பதிலுக்குப் பதில் தாரதிருக்கும் வாய்ப்பினைத் தராமல் தப்பித்துக்கொள்ளும் உத்தியென்று கருதவிடமில்லை. இந்தப்பதிவர் பூவுலகிலே எந்த இடத்தில் எந்தப்பெண்ணைக் கடிமணம் செய்தார் என்பதுகூட புதுப்பதிவர்களுக்குத் தெரிந்திருக்கும் அளவுக்கு வலைப்பதிவு வலிது வலிது; அதை விட வலிது வலைப்பதிவு பின்னான, வலைப்பின்னல்தன் வண்ணம். பதில் போட்டவர் தன் கணணியை மூடமுன்னால், அவர் 'பதில்' போட்ட விடயத்தைக் கொஞ்சமும் அட்சரம் குறைக்காமல் (கூட்டக்கூடும் :-)) ஒத்திக்கொண்டு பதிவு போட்டவர் பதிவுக்குப் பறந்து அமர்ந்து பரப்பும் காவிகள் வனைந்து கொண்டதாம் இவ்வலையுலகு. :-) ["இவனல்லாம் கண்டுக்கிட்டு, ரெஸ்பான்ஸ் பண்ணி பெரிய ஆளாக்கிடாதீங்க சார். அதுக்குத்தான் அலையறான்" என்று ஒரு போன் கால், ஈ-மயில்கூட பறந்து வந்திருக்காவிட்டால், எங்கேயோ உங்கள் பிரபலத்துக்குக் கொஞ்சப்பேர் சத்தம்போடாமல் வேட்டு வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம்.

ஆனால், சில பிரபல / முன்னிலை / பிரபலமில்லாத / கடை (இந்த வகைபிரிப்பெல்லாம் எதற்கென்பது எனக்குத் தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகளிலே எப்போதுமே மிகுந்த உயிர்போக மருந்துவேண்டுமென்பது மாதிரியான அவசியம் இல்லையென்றால், அநாமதேயமாகக்கூடப் பின்னூட்டமிடுவதில்லை; எளிமையான காரணம்: அவர்கள்கூட எவரினது பதிவுகளிலும் பின்னூட்டமிடுவதில்லை. இதனால், இருவருக்குமே எச்சேதமுமில்லை.

மீண்டும், நேரமும் பொறுமையும் எடுத்துப் பதில் தந்ததற்கு நன்றி. எத்துணை முரண்பாடுகளும் வெறுப்புகளுமிருப்பினுங்கூட, உங்களிலும் ஜெயமோகனிலும் இந்தப்பண்பு பிடித்துக்கொண்டிருக்கின்றது.

தருமி said...

காய்த்த மரத்தில் கல்லெறிவது நல்லதுதான் போலும்; இல்லையெனில் இத்தனை 'கனிகள்' விழுமா என்ன ..?

மாலன் said...

அன்புள்ள சிவபாலன்,
நன்றி

மாலன் said...

உங்கள் தமிழன்,
உங்களுக்கும் நன்றி

மாலன் said...

அன்புள்ள லக்கிலுக்,

>>தடை போடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவையும் அல்ல.. தடை செய்யப்படாத கருத்துக்கள் அனைத்தும் மெய்யானவையும் அல்ல என்பது என் கருத்து<<

உங்களது இந்தக் கருத்தில் எனக்கு மறுப்பேதூமில்லை. ஆனால் இங்கு விவாதம் பொய்யா? மெய்யா? என்பது பற்றியல்ல. நம்பகத்தன்மை (Credibility)பற்றியது.
ஒரு செய்தியை விடுதலைப் புலிகள் சொன்னால் ஏற்பவர்களின் எண்னிக்கையை விட, இந்துப் பத்திரிகை சொன்னால் ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஒரு நடைமுறை யதார்த்தம். (ground reality) நமக்கு இது உகப்பாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் ஆனால் இன்று இதுதான் யதார்த்தம்.

மாலன் said...

அன்புள்ள சிந்தாநதி,

>>பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் புண்படுத்தும் வரிகள் அவை<<

எனக்கு இலங்கைத் தமிழர்களைப் புண்படுத்தும், நோக்கமோ, விருப்பமோ சற்றும் இல்லை.எனக்கும் உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் எல்லாச் செயல்கலையும் ஆதரிக்கிறார்கள், ஒருமித்து அவர்கள் தலைமையை ஏற்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம்.Myth.விடுதலைப் புலிகளை விமர்சித்து பதிவுகளிலேயே கூட எழுதும் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.அமிர்தலிங்கம் பத்மநாபா தொடங்கி, கருணா வரைக்கும் விடுதலைப்புலிகளின் செயலை, தலைமையை ஏற்காத பல இலங்கைத் தமிழர்கள் உண்டு. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் புலிகளின் தலைமையை ஏற்கவில்லை என்பதால்தான் இஸ்லாமியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.

எனவே இலங்கைத் தமிழர்கள் = விடுதலைப்புலிகள் என்ற வாய்ப்பாடு தவறானது.அது இந்தியர்கள் அனைவரும் காங்கிரஸ்காரர்கள் அல்லது இந்துத்வாவாதிகள் எனறு சொல்வதைப் போல அபத்தமானது. நான் புலிகளின் அணுகுமுறையைத்தான் விமர்சிக்கிறேன். இலங்கைத் தமிழர்களை அல்ல.

மாலன் said...

அன்புள்ள செல்வேந்திரன்,

உங்கள் அக்கறைக்கு நன்றி.

நான் என் கருத்துக்களை அவற்றுக்கு ஆதாரமான தரவுகளோடு முன் வைக்கிறேன்.அதை மறுப்பவர்களும் அப்படி செய்ய முன்வந்தால் மகிழ்ச்சிதான்.

மாறாக சேற்றை வாரி இறைப்பார்கள் என்றால் அது என்னை அல்ல, அவர்களைத்தான் பலவீனப்படுத்தும். உலகில் பெரும்பாலானோர், பல பிரசினைகளில் எந்த நிலையும் எடுத்துக் கொள்ளாத நடுநிலையாளர்கள் என்பது என் நம்பிக்கை. அந்த நடுநிலையாளர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நம் கருத்தில் நமக்கு நம்பிக்கை இருந்தால் அதை நாம் சொல்ல அஞ்ச வேண்டியதில்லை.

Anonymous said...

//விடுதலைப் புலிகளை விமர்சித்து பதிவுகளிலேயே கூட எழுதும் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.அமிர்தலிங்கம் பத்மநாபா தொடங்கி, கருணா வரைக்கும் விடுதலைப்புலிகளின் செயலை, தலைமையை ஏற்காத பல இலங்கைத் தமிழர்கள் உண்டு.//

ஐயா பெரியவரே

நீங்கள் குறிப்பிடும் பெரியவர்கள் தான் எமது இன அடிவருடிகளுக்குத் தோழர்களாக இருந்து செயற்பட்டத்தை நீங்கள் அறியமாட்டீர்களோ அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்ள மாட்டீர்களோ?

மிகச் சமீபத்திய உதாரணம் கருணா குழுவை மேற்குலகம் தடை செய்யக்கேட்டிருந்ததை மறந்துவிட்டீர்களா? அவர்கள் தமிழ்த் தொழிலதிபர்களைக் கப்பம் கேட்டு கடத்திக் கொன்று குவித்ததை அறியமாட்டீர்களோ?

உங்களைக் கும்பிட்டுக் கேட்கின்றோம், எஞ்சியிருக்கும் எம் உறவுகளையாவது காப்பற்ற உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் பேசாமல் இருந்தாலே போதும். புலிகளைப் புனித புருஷர்களாக நாம் எல்லாரும் ஏற்கா விட்டாலும், அவர்கள் மட்டும் இன்று இல்லையென்றால் எமது உறவுகளுக்கு கோவணம் கூட மிஞ்சாது.

உங்களைப் போன்றவர்களுக்கு எமது பிரச்சனை ஒரு விளையாட்டாக இருக்கிறது. எமக்கோ அது உயிர்ப்போராட்டம்.

- பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்தமிழன் -

மாலன் said...

அனபுள்ள பெயரிலி,

முதலில் என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.

இணைய வரலாற்றை அதனூடே செயற்படுத்தியவர்களே எழுத/ தொகுக்க முனைந்திருப்பதை அறிய எனக்கு மகிழ்ச்சி. அந்த முயற்சி ஓராண்டுக்கு முன்னரே துவங்கிவிட்டதை நான் அறியேன். அதனை எங்கு வாசிக்க இயலும் என்று தெரிவித்தால் நன்று.

பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரு வேளை என் பதிவில் பின்னூட்டம் பிரசுரமாவதில் சங்கடங்கள் இருக்குமானால், அவற்றை பிரசுரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டு அனுப்புங்கள். இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுவதால் அவை மற்றவர் பார்வைக்குப் போகாது. அல்லது நீங்கள் எனக்கு மின்னஞல் அனுப்பலாம். நீங்களே சொல்வது போல அடுத்தவரின் அந்தரங்கம் கூட அறிந்து வைத்திருக்கும் பதிவுலகில் என் மின்னஞச்ல் முகவரி கிடைப்பது அவ்வளவு சிரமமாக இராது. உங்கள் பதிவிலேயே அதை நீங்கள் வெளியிட்டுக் கொள்வதும் கூட முறையானதுதான். ஆனால் அப்படிச் செய்யும் பட்சத்தில், அதனைக் குறித்த தகவலைப் பின்னூட்டப் பெட்டியிலோ, மின்னஞ்சலிலோ தெரிவித்துவிட்டால் நலமாக இருக்கும்.

மாலன் said...

அன்புள்ள யு.எஸ்.தமிழன்,

உங்கள் பின்னூட்டம் இங்கு நடைபெறும் விவாதத்திற்கு எந்தச் செழுமையும் சேர்க்காத, தனி நபர் மீதான எள்ளல் வெளிப்படும் பின்னூட்டமாக இருப்பதால் அதனை இங்கு வெளியிட இயலவில்லை.

ஆனால் அது குறித்த என் கருத்துக்களை உங்கள் பதிவில் இட்டிருக்கிறேன், உங்கள் தகவலுக்காக.

Anonymous said...

//ஒரு செய்தியை விடுதலைப் புலிகள் சொன்னால் ஏற்பவர்களின் எண்னிக்கையை விட, இந்துப் பத்திரிகை சொன்னால் ஏற்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.//

//இலங்கைத் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் எல்லாச் செயல்கலையும் ஆதரிக்கிறார்கள், ஒருமித்து அவர்கள் தலைமையை ஏற்கிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம்//

ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை விட இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதற்குக் காரணம்.

இந்தியத் தமிழர்களில் இந்துப் பத்திரிகையை நம்புகிறவர்களின் சதவீதத்தை விட ஈழத்தமிழர்களில் விடுதலைப்புலிகளை நம்புகிறவர்களின் சதவீதம் மிக அதிகம்.

புள்ளி விவரம் என்பது எண்ணிக்கையில் மட்டும் அடங்கி விடுவது அல்லவே.

இரண்டாவது விடுதலைப்புலிகளின் எல்லாச் செயல்களையும் ஏற்காதவர்கள் கூட இன்று ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவர்கள் தான் என்பதை நம்புவதாக உணர முடிகிறது. இதே உணர்வு இந்தியத் தமிழர்களில் பலருக்கும் இருக்கிறது.

இலங்கை அரசுக்கு ஆதரவான செயல்பாடுகள் வரும்போது அது விடுதலைப்புலிகளுக்கு எதிரானவை என்பதற்கு மாறாக தங்களின் விடுதலைப் போராட்ட உணர்வையே ஏளனப் படுத்துவதாகவே ஈழத் தமிழர்கள் உணர்கிறார்கள்.

//விடுதலைப் புலிகளை விமர்சித்து பதிவுகளிலேயே கூட எழுதும் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.// அது அவர்களின் உரிமை. விடுதலைப்புலிகளை அவர்களே விமர்சிப்பதும் சகோதரத் தமிழ்ர்கள் அதற்காகஇலங்கை அரசை ஆதரிப்பதும் ஒன்றாகி விடாது.

இலங்கை அரசுக்கு ஆதரவான எந்த எழுத்தையும் எந்த செய்கையையும் ஈழத்தமிழர்கள் எவரும் ஆதரித்ததாகவும் நான் கண்டதில்லை. இந்துப் பத்திரிகை அதைத்தான் செய்து வருகிறது. விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் ஈழத்தமிழர்கள் கூட இந்து, சோ போன்றவர்களை ஆதரிப்பதில்லை.

ஈழபாரதி said...

//ஒருமித்த ஆதரவு இல்லை என்பதால்தான் அன்று யாழ்ப்பாணம் வீழ்ந்தது. இன்று தொப்பிகலா வீழ்ந்தது.//

இது ஏற்புடைய கருத்து அல்ல,யாழ்ப்பணமும், தொப்பிக்க்லாவும் வீழ்ந்தபோது ஒருமித்த கருத்து இல்லை என்றால் முல்லைத்தீவும்,கிழிநொச்சியும்,ஆனையிறவும் புலிகள் கைலளில் வீழந்த போது ஒருமித்த கருத்து ஏற்பட்டு விட்டதா?

களநிலவரங்கள் போராளிகளின் மனதிடத்திலும்,வளத்திலும் ,யுத்தியிலும் மாறுபடும், நாளையே யாழ்ப்பணம் வீழ்ந்து விட்டால் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விட்டது என எடுத்துக்கொள்ளலாமா?

பெரும்பாலான தமிழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

Anonymous said...

கற்றாரில் கயவர் உளரோ? உளர். வாங்கிப் படியுங்கள் இந்து.

-/பெயரிலி. said...

/பின்னூட்டங்களுக்குப் பயந்ந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கத் தயங்குவது என்பதற்கும், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் புத்திசாலித்தனத்திர்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை./

நான் எழுதியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ என அஞ்சுகிறேன். நான் பின்னூட்டமிடப் பயப்படவில்லை. ஆனால், ஒருவர் ஒரு பின்னூட்டம் இடுகை இட்டவருக்கு மாற்றாக இட்டபின்னால் அப்பதிவிலே அதைத் தொடர்ந்து பலர் ஏன் எமக்கு வம்பு என்று தம் சொந்தக்கருத்துகளையும் தெரிவிக்க அஞ்சுவதைத்தான் சொல்கிறேன் :-)

ஓர் உதாரணத்துக்கு, உங்கள் முன்னைய பதிவுகளிலே பின்னூட்டம் இட்டவர்களிலே எத்தனை பேர் இங்கே பின்னூட்டியிருக்கின்றார்களெனப் பாருங்கள். இந்த இடுகை கொஞ்சம் விவகாரமான இடுகை என்று எண்ணிக்கொண்டு தள்ளி நிற்பார்கள். அதன் காரணமாகவே பல பதிவுகளின் "சமநிலை"யைக் குழப்பவேண்டாம் என சொந்தப்பெயரிலோ பெயரில்லாமலோகூடப் பின்னூட்டுவதில்லை. அதைத்தான் சொன்னேன்.

மாலன் said...

>>எமது உறவுகளுக்கு கோவணம் கூட மிஞ்சாது<<

கேட்க வருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால் பத்திரிகையாளர்கள் எழுதுவதாலோ, எழுதாமலிருப்பதாலோ உங்கள் பிரசினை தீரப்போவதில்லை. ஏனெனில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு நீங்கள் ஏற்றுக் கொண்ட ராணுவத் தலைமையும் அதன் அணுகுமுறைகளும், அதனால் விளைந்த தவறுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதை என்றாவது உணர்ந்து கொள்வீர்கள். அதைச் சொல்ல உங்களுக்குப் பத்திரிகையாளர்கள் தேவைப்படும்.

மாலன் said...

அன்புள்ள சிந்தாநதி,

>>ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை விட இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதற்குக் காரணம்.<<
ஒருவர் ஒரு கருத்தை ஏற்பதற்கு எண்ணிக்கை மட்டுமல்ல.நம்பிக்கையும் காரணம்.

>>இந்தியத் தமிழர்களில் இந்துப் பத்திரிகையை நம்புகிறவர்களின் சதவீதத்தை விட ஈழத்தமிழர்களில் விடுதலைப்புலிகளை நம்புகிறவர்களின் சதவீதம் மிக அதிகம்<<

இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.நம் நம்பிக்கைகள் நம் சார்புகளைச் சார்ந்தெழுபவை அல்லவா? நாம் இங்கு தமிழ்நாடு, இலங்கை என்ற இரு நிலவியல் பகுதிகளின் அடிப்படையில், ஹிந்து, விடுதலைப்புலிகளின் நம்பகத்தன்மை குறித்துப் பேசவில்லை, உலக அரசியல் அரங்கில் அவற்றிற்கிருக்கும் நம்பகத்தன்மை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் எனக் கருதுகிறேன்.

>>//விடுதலைப் புலிகளை விமர்சித்து பதிவுகளிலேயே கூட எழுதும் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.// அது அவர்களின் உரிமை<<

என்ன சொல்லவருகிறீர்கள் எனத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. இலங்கைத் தமிழர்கள் அவர்களது ராணுவத் தலைமையை விமர்சிக்கலாம், அது அவர்களது உரிமை, ஆனால் நீ அயலவன் அதனால் விமர்சிக்கக் கூடாது என்கிறீர்களா? அப்படியானால் அந்த நியாயம் அவர்களுக்கும் பொருந்தும் அல்லவா? அதாவது இந்தியாவிற்கு அயலவரான அவர்கள், இந்திய அரசு, இங்குள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், சினிமா நடசத்திரங்கள்,ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் இவற்றையெல்லாம் விமர்சிக்க உரிமை இல்லை அல்லவா?

நான் இதுவரை இலங்கை அரசின் செயல்களை ஆதரித்தோ, நியாயப்படுத்தியோ எழுதியதில்லை. விடுதலைப் புலிகளை விமர்சிப்பது கூட இலங்கை அரசை ஆதரிக்கும் செயலாகிவிடக் கூடும் என்று நீங்கள் வாதிடலாம். அதே அடிப்படையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போரை ஆதரிப்பது, இந்திய இறையாண்மை, இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் இவற்றை பலவீனப்படுத்தும் என்பதனால் அதை எதிர்ப்பது சரிதான் என்றாகிவிடும்.

இலங்கைப் பிரசினையில். எல்லாத் தரப்புக்களும் தவறு செய்திருக்கின்றன. எனவே தவறுகளைப் பற்றி விமர்சிப்பது என்று ஆரம்பித்தால் எல்லோரையும் சமநிலையில் நின்று விமர்சிக்க வேண்டும். அப்படி இல்லாமல் இந்தியாவை மட்டும் விமர்சிப்பது என்பது ஒரு தலைப்பட்ட்சமானது. அந்த மாதிரியான சூழலில் நான் ஒரு இந்தியனாக, இந்தியநிலையை ஆதரித்துப் பேசுவேன் என்பதுதான் என் நிலை. அது என் உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. அதற்காக நான் பெருவாரியான வாசகர்களால் நிராகரிக்கப்படக்கூடும் என்ற நிலை ஏற்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் நான் எழுதுவது Popularityக்காக அல்ல. என் கருத்துக்களை வெளியிடுவதற்காக.

மாலன் said...

அன்புள்ள ஈழபாரதி,

>>இது ஏற்புடைய கருத்து அல்ல.......களநிலவரங்கள் போராளிகளின் மனதிடத்திலும், வளத்திலும்,யுத்தியிலும் மாறுபடும்<<

இருக்கலாம். ஆனால் மக்கள் ஆதரவைப் பெறாத எந்த ராணுவ நடவடிக்கையும் களத்தில் வெற்றி காண முடியாது. அன்றைய உதாரணம்: வியட்நாம். இன்றைய உதாரணம்:ஈராக். இடைக்கால உதாரணமாக இந்திய அமைதிப்படைக்கு இலங்கையில் ஏற்பட்ட நிலையை எடுத்துக் கொள்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.

கொழும்பு வரை சென்று வான்வழித் தாக்குதல் நடத்துமளவு வலிமை கொண்டவர்களாகக் கருதப்பட்ட ஒரு ராணுவம், தங்கள் ஆளுகைக்குள் இருந்த சொந்த மண்ணில் தோற்றது எதனால்? இந்தக் கேள்வியை ஆராய்ந்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

>>நாளையே யாழ்ப்பணம் வீழ்ந்து விட்டால் ஒருமித்த கருத்து ஏற்பட்டு விட்டது என எடுத்துக்கொள்ளலாமா<<

ஆம்.ஆனால் அந்த ஒருமித்த கருத்து ஏற்பட விடுதலைப்புலிகள் காரணமாக இருந்தார்களா அல்லது இலங்கை ராணுவத்தின் நடவடிக்கைகள் காரணமாக இருந்தனவா என்பதுதான் அப்போது ஆராயப்பட வேண்டிய விஷ்யம்.


>>பெரும்பாலான தமிழர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள் என்பதே யதார்த்தம்<<

ஒருமித்த என்பதற்கும் பெரும்பான்மை என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

மாலன் said...

ஒரு முக்கிய அறிவிப்பு:

விவாதம் தமிழிணைய வரலாற்றிலிருந்து விடுதலைப்புலிகளின் அரசியல் நோக்கித் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர அனுமதித்தால் இடுகையில் இடப்பட்டுள்ள பொருளிலிருந்து விவாதம் விலகக்கூடும் என்பதால், இனி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான, அல்லது எதிரான கருத்துக்க்ள் கொண்ட பின்னூட்டங்கள் ஏற்கப்படமாட்டா.

இலங்கைப் பிரசினையும் விடுதலைப்புலிகளது அரசியலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. இந்தச் சந்தடி அடங்கிய பிறகு அதைக் குறித்து ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன். அதற்கான சூழல் விரைவிலேயே கிட்டும் என நம்புகிறேன்.

அன்புடன்
மாலன்

ILA (a) இளா said...

இ-தமிழின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி

Anonymous said...

I have a yahoo 360 blog ,and ther we are a very happay family. We encourage and console each other. But never at each others throat. I come to jannal cos I enjoy maalans articles and respect him as a writer and journalist.
I feel that tamil blogs are getting real competitve. Please give respect for others views.

Anonymous said...

//மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது.//

Exactly.

Anonymous said...

Very nicce!

Anonymous said...

How I can download documents from WikiLeaks?
Thanks