Thursday, July 19, 2007

கதையல்ல, வாழ்க்கை

அப்பாவா?
நசீமாவால் நம்பத்தான் முடியவில்லை.கையிலிருந்த தொலைபேசியை மறுபடியும் பார்த்தார். அதற்குள் மறுமுனை ஹலோ, ஹலோ என்று சிலமுறை கூப்பிட்டுவிட்டது.
"லைன்லதான் இருக்கேன் சொல்லுங்க"
"உங்க அப்பா உயிரோடுதான் இருக்கிறார்"
"அப்படியா? எங்கே?" கேட்கும் போதே அவரது குரல் உடைந்தது. தனது எட்டு வயதில் அப்பாவைப் பிரிந்து, இதோ இப்போது 24 வருடங்கள் ஆகப்போகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. இப்போது சென்னையில் இருக்கும் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் சவுதி அரேபியாவில் இருக்கும் தன்னைக் கூப்பிட்டு அப்பா உயிரோடுதான் இருக்கிறார் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

"நீங்களே அவர் கிட்ட பேசுங்க" என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி சொன்னபோதும் நசீமாவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை.சந்தேகம்தான் தோன்றியது. அப்பாவிடம் பேசுவதா? அவருக்குக் காதும் கேட்காது, வாயும் பேசவராது.

ஆனால் நசீமா பேசினார். அப்பா இப்போதும் பேசவில்லை. ஆனால் நசீமா பேசுவதைப் புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சுக்குப் பதிலாக எழுப்பிய சப்தங்கள் உணர்த்தின.

நசீமாவின் கதை சினிமா போன்றது. அது பின்னோக்கி ஓடி 24 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இப்ராஹிம் ஷெரீப்பிற்கு மூன்றும் பெண்கள். மும்தாஜ், ஷம்ஷாத், நசீமா. அவர் அப்போது காஞ்சிபுரத்தில் பீடி சுற்றும் கூலியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். சிரம ஜீவனம்தான். மனைவி ரோகயா பீவி டி.பியில் இறந்த பிறகு அந்த வாழ்க்கை இன்னும் கடினமானது. அவர்தான் மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

மூன்று குழந்தைகளிலும் அவருக்கு கடைக்குட்டியான நசீமாமீது கொள்ளைப் பிரியம். தனது சிரமமான வாழ்க்கைக்கு நடுவேயும் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆனால் விதி வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

நசீமாவிற்கு எட்டு வயதான போது, ஷெரீபின் உறவினர் ஒருவர் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார். நசீமாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தன்னுடன் அழைத்துப் போவதாகச் சொன்னார். ஷெரீபிற்கு மகளைப் பிரிய விருப்பமில்லை. நாம்தான் இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம், நம் குழந்தையாவது எங்கேயாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ, அரை மனதாக சம்மதித்தார்.

அந்த உறவினர் நசீமாவை சென்னையில் ஒரு தம்பதியிடம் விற்றுப் பணத்தை வாங்கிக் கொண்டு காணாமல் போய்விட்டார். நசீமாவை விலை கொடுத்து வாங்கிய தம்பதி போலீஸ்காரத் தம்பதி. கணவன் மனைவி இருவருமே காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எட்டு வயதுக் குழந்தையின் தலையில் அத்தனை வேலைகளையும் சுமத்தினார்கள். அது செய்ய முடியாமல் திணறிய போது அதட்டினார்கள், அடித்தார்கள், உதைத்தார்கள், கையில் சூடு கூட வைத்தார்கள்.

செல்லக் குழந்தையாக வளர்ந்த நசீமாவால் கொடுமை தாங்க முடியவில்லை. தினம் வீதியில் வந்து காய்கறி விற்கும் ஒரு வண்டிக்காரரின் உதவியுடன் தப்பிவிட்டார்.

வீடு எங்கே என்று கேட்ட போது அண்ணா நகர் என்று சொன்னார் நசீமா. வண்டிக்காரர் நசீமாவை அண்ணாநகரில் கொண்டுவிடச் சொன்னார். நசீமா சொன்னது காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாநகர் என்ற குடிசைப்பகுதியை. ஆனால் இந்த அண்ணாநகர் சென்னையில் பங்களாக்கள் நிறைந்த அண்ணா நகர். அடுக்கு மாடிக் கட்டிடங்களும், நொடிக்கொரு கார் விரைகிற அகன்ற வீதிகளுமாக இருந்த இது அவருக்குப் பரிச்சயமான அண்ணாநகராக இல்லை

.இனி என்ன செய்வது என்ற கவலை எழுந்தது. மீண்டும் அந்தக் கொடுமைக்கார தம்பதியிடம் மாட்டிக் கொண்டுவிடுவோமோ என்ற அச்சம் அவரை அரித்தது. பயத்திலும் ஏமாற்றத்திலும் அழுகை பொங்கிப் பொங்கி வந்தது.

வீதியில் அழுது கொண்டிருந்த குழந்தையை அந்த தம்பதிகள் பார்த்தார்கள் அவர்கள் மைசூரிலிருந்து வந்து சென்னையில் குடியேறியிருந்த பிராமண வகுப்பைச் சேர்ந்த தம்பதிகள். அவர்கள் நசீமாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் தேற்றினார்கள். அதற்குள் நசீமாவின் குடும்பம் காஞ்சிபுரத்தை விட்டகன்று, வேலூருக்கோ, ஆற்காடுக்கோ குடிபெயர்ந்திருந்தது. அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

நசீமாவை அந்த பிராமணத் தம்பதிகளே பிரியத்தைக் கொட்டி மகளைப் போல வளர்த்தார்கள். நசீமாவின் வாழ்வில் அந்த நாட்கள் ஒரு பொற்காலம். தங்கள் வழக்கங்கள் எதையும் நசீமா மீது திணிக்கவில்லை. நசீமா தனது மத நம்பிக்கைகளைக் கைவிடுமபடியும் வற்புறுத்தவில்லை. நசீமா தங்கள் மத வழக்கப்படி பர்தா அணிய விரும்பியபோது அதைத் தடுக்கவும் இல்லை.

சில ஆண்டுகளில் ஒருயுவதியாக மலர்ந்துவிட்ட நசீமாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பணக்கார இஸ்லாமியக் குடும்பததைச் சேர்ந்த சையத் மணக்க விரும்பினார். அந்தத் தம்பதிகள் அந்த வரனைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்டு நன்கு விசாரித்து அறிந்து கொண்டனர். " என்னை அழைத்து நசீமாவின் முன் நடக்கச் சொல்லிக் கூடப் பார்த்தார்கள், எனக்கு ஏதும் ஊனம் இல்லையே என உறுதிப்படுத்திக் கொள்ள" என்கிறார் சையத்.

திருமணத்திற்குப் பின் நசீமாவும் சையத்தும் வெளிநாட்டில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். அப்போது நசீமாவிற்கு 20 வயது. வசதியான வாழ்க்கையை உடல் அனுபவித்தாலும் மனதில் வறுமையில் வாடிய நாட்களின் ஞாபகம் வந்து போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு வறுமையிலும் தன்னை ஒரு ராஜகுமாரி போல கவனித்துக் கொண்ட அப்பாவின் நினைவுகள் வந்து வதைக்கத் துவங்கின. மழை நாட்களில் தன் காலில் சேறு படிந்துவிடக் கூடாது என்ற அக்கறையில், தன்னை தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஸ்கூலில் கொண்டு விட்ட அன்பை நினைத்தால், காலில் செருப்பை மாட்டும் போது, கண்கள் பொங்கும்.

அப்பாவைத் தேடித் தரும்படி கணவனை நச்சரிக்கத் தொடங்கினார் நசீமா. கணவரது பிசினஸ் பார்ட்னர், சென்னை போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதினார்.கூடவே ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதினார்கள். துப்பறியும் நிறுவனத்தினர், முதலில் சைபுனீசாவை, அவர்தான் நசீமாவை விற்ற உறவினர், தேடிக் கண்டுபிடித்தனர். அவர் மூலம் இப்ராஹிம் ஷெரீப்பைக் கண்டுபிடித்தனர்.

நசீமா இப்போது நெகிழ்ந்து போயிருக்கிறார். என் கணவருக்கு இருப்பதைப் போல எனக்கும் இப்போது ஒரு குடும்பம் இருக்கிறது என்கிறார். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து.

*

இது கதை அல்ல. வாழ்க்கை. அண்மையில் ஜெயா மேனன் சேகரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியிட்டிருந்த தகவல்களைக் கதை வடிவில் தந்திருக்கிறேன்.
வாழ்க்கைதான் எத்தனை ஆச்சரியங்கள் நிறைந்தது!

நன்றி: ஜெயா மேனன்/ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

Saturday, July 14, 2007

அன்புள்ள பெயரிலிக்கு.....

அன்புள்ள ரமணீதரன், பெயரிலி, அலைஞன் எனப் பல பெயர்களால் அறியப்படும் பெயரிலி என்ற நண்பருக்கு,



என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள் பதிவில்- மன்னிக்கவும் உங்கள் ஈகோ இன்ஜினில்- எனக்குச் சில கேள்விகளை நீங்கள் வீசியிருந்தாலும், உங்கள் பதிவில் அவற்றுக்குப்
பதிலளிப்பதைப் பெறும் பேறாகக் கருதி இதனை எழுதுகிறேன்.


முதலில் உங்களுக்கு நன்றி.என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை, எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன், வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்களே, அதற்காக நன்றி.


நீங்கள் மெய்யாகவே விளக்கங்களை வேண்டி அந்தக் கேள்விகளைத் தொடுத்திருந்தால்,அதை என் பதிவிலோ அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்பியோ கேட்டிருப்பீர்கள். ஆனால் உங்களின் உண்மையான அக்கறை
அவற்றுக்கான பதில் அல்ல. வெறுமனே அலை எழுப்புவது. அலைஞன் அல்லவா நீங்கள்?


என்றாலும் விளக்கங்கள் கொடுப்பதில் எனக்கு ஏதும் சிரமம் இல்லை. நேரப் பற்றாக்குறை தவிர.


முதலில் சில கருத்துக்கள்:
1.இந்த எட்டுப் போடுகிற விளையாட்டு என்பதே ஒருவர் தன்னைப் பற்றிய விவரங்களை தன் கோணத்திலிருந்து எழுதுவதுதான். (உங்கள் வார்த்தைகளிலேயே சொல்வதானால், "மிகத்தீவிரமாக இணையத்திலே எட்டுக்குனியா பரவும் இக்காலகட்டத்திலே 'sexed up self claims' நோய்க்குறி") வரலாறு எழுதுவ்து விளையாட்டான விஷயம் அல்ல என்றே நான் கருதுகிறேன். அப்படியிருக்க நீங்கள் ஏன் நான் ஏதோ வரலாற்றைத் திரித்துவிட்டதாக அல்லது வரலாற்றை மறைத்து விட்டதாக அல்லது வரலாற்றுப் பிழை செய்துவிட்டதாக ஆவேசப்படுகிறீர்கள்?


2.நான் அந்தப் பதிவில் நான் என் Formative years, எனக்கு கவியுலகோடு ஏற்பட்ட அறிமுகம்,எழுத்துலகோடு ஏற்பட்ட அறிமுகம், பத்திரிகை உலகோடு ஏற்பட்ட் அறிமுகம், அரசியல் உலகோடு ஏற்பட்ட அறிமுகம், என என் பல துவக்கங்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதைப் போல,கணினியுடனும் இணையத்தோடும், வலைப்பதிவுலகோடும் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன்.அதில் எந்த இடத்திலும் நான் இணைய அறிஞர் என்றோ, இணைய முன்னோடி என்றோ குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படியிருக்க நீ என்ன பெரிய..... என்ற கேள்விக்கோ, கேலிக்கோ அவசியம் என்ன?


"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்கள். வரலாற்றைத் திரிப்பவனாக நீங்கள் கருதும் என் கருத்தை விட்டுத் தள்ளுங்கள். ஆனால் இந்தத் தரவுகளைப் பாருங்கள்:


தரவு-1
"முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. "1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words,
Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது"
மேலே உள்ளது தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து பெறப்படது. " கணினியில் தமிழ் என்ற பக்கத்தில் இணையத் தமிழ் முன்னோடி - நா. கோவிந்தசாமி என்ற துணைப்பிரிவில் இந்தத் தகவல் காணப்படுகிறது.


தரவு-2


"Naa Govindaswamy passed away in Singapore, on 26 May 1999 at the relatively young age of 52. He was one of the pioneers of the Tamil digital renaissance of the 20th century. Tamils living in many lands have lost an enthusiastic and gifted worker who had contributed much to nurture their growing togetherness.
The print revolution brought Tamil from the ola leaves to paper, from the select few literati to the many. The digital revolution is bringing Tamil from paper to the computer and the internet. U.V.Swaminatha Iyer and Thamotherampillai heralded the Tamil renaissance in the 19th century. Both Naa Govindasamy and Kuppuswamy Kalyanasundaram have made important contributions to the Tamil digital renaissance of the 20th century."


இது தமிழ்நேஷன் என்ற வலைப்பக்கத்தில் காணப்படும் குறிப்பு: காண்க
http://www.tamilnation.org/hundredtamils/naag.htm


தரவு-3
"உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!
1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.
இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம்
ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்."
இது 2004ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத் தமிழ்மாநாட்டில் ஆலபர்ட் என்பவரால் அளிக்கப்பட்ட நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி என்பவ்ரின் கட்டுரையிலிருந்து.


தரவு-4


"Tamnet formerly known as Tamil Network Publishing House, was established in 1996 by Mr Naa Govindasamy (1946 - 1999), who is more fondly remembered as the Father ofTamil internet."-இது கணியன் தளத்திலிருந்து (http://www.kanian.com/profile.htm)


தரவு-5


"தமிழ் இணையத்திற்கு முன்பாகவே தமிழ் எழுத்துரு முயற்சிகள் சிங்கப்பூர் நா.கோ மற்றும் இன்ன பிற ஆர்வலர்களால் சிறப்பாகச் செய்யப்பட்டது..."
இது சகவலைப்பதிவர் அலெக்ஸ் பாண்டியன் ஜீன் 14, 2005ல் எழுதியது.இங்கு அவர் தமிழ் இணையம் எனக்க்குறிப்பிடுவது தமிழ்,நெட் டைத்தான்.தமிழ்.நெட் பற்றி நன்கு அறிந்தவர் அதைக் குறித்து விரிவாக தனது பதிவில் மூன்று பகுதிகளாக எழுத்யிருக்கிறார். அலெக்ஸ் பாண்டியன் 97 அல்லது 98லிருந்து இணையத்தில் உலவி வருபவர் எனச் சொல்ல முடியும். காண்க: http://alexpandian.blogspot.com/2005/06/1.html


என்னுடைய கேள்வி எல்லாம், மேலே உள்ள எல்லாத் தரவுகளும், என் வலைப்பதிவு எழுதப்படுவதற்கு முன்னரே இனையத்தில் இடம் பெற்றிருந்தவை. இந்த இடங்களுக்குச் சென்று இதற்கு முன்னர்,
"கோவிந்தசாமிதான் முதலிலே இணையத்திலே தமிழேற்றியிருக்கின்றார் என்கின்றீர்கள். அதிலே எத்துணை உண்மையிருக்கின்றது?" என்று கேட்டிருக்கிறீர்களா என்பதுதான். உங்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் அலலது நிலைநாட்டும் ஆர்வம் மெய்யாகவே இருந்திருக்குமானால் நீங்கள் அதைச் செய்திருப்பீர்கள். ஆனால் உங்கள் நோக்கம் அதுவல்ல. உங்கள் ஆர்வம் அலை எழுப்புவதில்;ஆறுமுக நாவலர் குறித்து நான் வெளியுட்டுள்ள சில கருத்துக்கள் காரணமாக என் மீது ஏற்பட்டுள்ள மனச்சாய்வின் காரணமாக, காழ்ப்பின் காரண்மாக என் மீது சாணி எறிவது.


சரி ஏன் நா.கோ.முதலில் தமிழை இணையத்தில் ஏற்றியவராகக் கருதப்படுகிற்ர்?


நா.கோவே தனது முயற்சி என்ன என்பதை விளக்குகிறார்:
" Singapore is a multilingual and a multiracial country. English, Chinese, Malay and Tamil are the official languages. Most of the government and public documents are published in these four official languages.
However, until recently, it was not possible for the Chinese and Tamil languages to be disseminated through the World Wide Web on the Internet.


In 1994 Dr Tan Tin Wee, my research collaborator initiated work in this area while he was the head of Technet Unit, the first Internet service provider for Research and Educational Institutions in Singapore. Technet Unit was directly under the supervision of the Computer Centre of the National University of Singapore. (Technet Unit has since been commercialised to become Pacific Internet, one of the three ISPs for Singapore. The others are Singnet and Cyberway.) By mid-1994, Technet Unit initiated the Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official languages to be represented in the INFOMAP.


Since English and Malay are using the Roman script, displaying these two languages on the WEB was not a problem. By the end of 1994, Technet had successfully implemented an Experimental Chinese WEB server in Singapore. So the problem of displaying the Chinese script on the Web was solved. However, displaying Tamil script on the Web, and communicating through Tamil on Internet was a problem. There was no Tamil Information System on the Internet which provides a display system in Tamil and English simultaneously on the Text Mode using a Tamil-English single font file. There were a few servers, which were providing Tamil script using GIF image files.
Tamil Eelam Page (http://www.eelam.com/) was and is still very active in this direction. Tamil Nadu Home Page, and Tamil Electronic Library . (http://www.geocities.com/Athens/5180/index.html) are other popular Tamil Web Sites on Internet at that time. Tamil Electronic Library was using (and is still using) a mono 7bit
font (Mylai) for the Tamil display on the Web.However, Mylai font cannot support native emailing at that time.

So there was a need to develop a Tamil Internet System which should go

beyond Web display.

In May 1995, I met Dr Tan at the Technet Unit, National University of Singapore, soon to become the Internet Research and Development Unit (IRDU) (now upgraded to Centre for Internet Research). We identified the potential solutions and agreed for a possible research collaboration between NUS and my institution, NIE, NTU, the two instititutions of higher learning in Singapore at that time.


At that time, on my own, I was in the process of developing True Type fonts and a Tamil software for Windows Applications (Kanianப)�ப Tamil Software). As the service provider arm of the Technet was sold to a private consortium and renamed Pacific Internet in September 1995, the nascentTamil Internet Research was inherited by the newly formed Internet Research and Development Unit (IRDU). This Research Unit was funded by the National Science and Technology Board (NSTB ) (http://www.nstb.gov.sg/) of Singapore. Mr Leong Kok Yong, just graduated from the Nanyang Technological University, joined IRDU, and became one of the key member for the TamilWEB project.


Objective
During the Technet period, when Dr Tan and I, conceptulised the TamilWEB Project. We had a very clear objective.That is: to develop a bilingual font system for The Total Internet Communication in the Tamil language. That means, the system that we intended to develop:


should provide display of Tamil & English Text simultaneously on the Internet Applications. (Web Browsers & Email sofware packages.)

Tamil and English text should be easily communicated and retrieved in Plain Text.

should work across Platforms. (PC, Mac & Unix)

should be searchable in Tamilshould let the user type Tamil in the Web browser's Forms, and the typed word should be seen in Tamil.

Should allow the user to read Tamil & English in terminal emulation mode (telnet).


Prototype Testing, Preview and Official launch


The prototype of our system was tested during the launch of PoemWEB. PoemWeb is an electronic selection of representative poems from the four official languages, from the book , Journeys: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) which was published by The Centre for the Arts, National University of Singapore. This book was launched by H.E. Mr Ong Teng Cheong, President, Republic of Singapore on Friday 27 Oct 1995.
The preview of the first phase of TamilWEB project was shown to the public and to the Press at the Internet for Everyone 1995 at Suntec City Exibition Hall during 13 December 1995. TamilWeb was officially launched by the Honourable Member of Parliament, Dr Ong Chit Chung (Chairman, GPC for Education and MP for Bukit Batok) on 2 February 1996"


இது கோவிந்தசாமி செப்டெம்பர் 14 1998ம் ஆண்டு, புனேவில் நடைபெற்ற SAARC Conference on Extending the Use of Multilingual & Multimedia Information Technology என்ற மாநாட்டில் அளித்த Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research என்ற கட்டுரையிலிருந்து. இதன் பிரதியை http://www.tamilnation.org/digital/tamilnet99/govindasamy.htm என்ற
இடத்தில் காணலாம்


நீங்கள் கணியன் இதழ்களை மனதில் கொண்டு பேசுகிறீர்கள் எனபது, "கணியன் இதழ் தமிழ்நெட் எழுத்துருவிலே தொடங்கமுன்னரே, மயிலையிலே இணையத்திலே வலைப்பக்கங்கள் இருந்தன " என நீங்கள்
குறிப்பிடுவதிலிருந்து புரிந்து கொள்கிறேன். நான் கணியன் இதழ்களை அடிப்படையாகக் கொண்டு என் கருத்தைப் பதிந்திருக்கவில்லை. நான் குறிப்பிடுவது சிங்கப்பூர் அரசு மேற்கொண்ட முயற்சிகளையும், அதில்
கோவிந்தசாமிக்கு இருந்த பங்களிப்பையும்.


தமிழ் நெட் 1995ல் துவங்கப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது: "இணையப் பாவனையும் தமிழில் மின்னஞ்சல் சாத்தியமான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன. இந் நிலையில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலா பிள்ளை என்பவர் ஒரு மடலாடற்குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார்."


சிங்கை அரசின் முயற்சிகள் 1994ல் துவங்கிவிட்டன. "By mid-1994, Technet Unit initiated the Singapore INFOMAP project which provided a one-stop WWW home page for Singapore. He wanted the four official languages to be represented in the INFOMAP." (இதில் he என்பது Dr,டான் டின் வீ யைக் குறிக்கிறது என்பதை மேலே உள்ள கோவிந்தசாமியின் கட்டுரையைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்)


தமிழ் நெட் எழுத்துரு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் தமிழ் நெட் மடலாடற்குழுவில் எழுதியவர்கள் முத்து நெடுமாறனின் எழுத்துருவைப் பயன்படுத்தியதாக விக்கி பீடியா குறிப்பிடுகிறது: "முரசு அஞ்சல்
எழுத்துருவை நியமமாகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது."


மயிலை எழுத்துருவில் இணையப்பக்கங்கள் இருந்தன என்பதும் அதை நா.கோ தன் கட்டுரையில் சுட்டியிருக்கிறார் என்பதும் உண்மைதான்.ஆனால் அவற்றின் limitaionகளையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.மயிலை எழுத்துருவை வடிவமைத்தவரும், மதுரைத் திட்டத்தை நிறுவியவருமான டாக்டர். கல்யாணசுந்தரம், 1999ல் தகுதர எழுத்துக்களுக்கும், பின் 2003ல் யூனிகோடிற்கும் தன் தளத்தை மாற்றிக்கொண்டுவிட்டார் என்பதுவே அதன் limitationகளைச் சுட்டப் போதுமானது. "மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மாணிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகிறோம்." என் மதுரைத் திட்டத்தில் காணப்படும் குறிப்பு சொல்கிறது.


தகுதரத்தின் வரைவு முன்வடிவம் டிசம்பர் 1997ல் வெளியிடப்பட்டது. ('TSCII stands for Tamil Standard Code for Information Interchange. It is a character encoding standard for Tamil on computers. Read the draft proposal released in December 1997, for a detailed discussion. The current draft is labelled, TSCII 1.7" இந்தக் குறிப்பை http://www.tamil.net/tscii/tscii.html என்ற இடத்தில் காணலாம்)



நா.கோ சிங்கப்பூர் அரசின் உதவியுடன், கணியன் பூங்குன்றன் பாடலுடன் வெளியிட்ட இணையதளம் 1995 அக்டோபரிலேயே வலையேறிவிட்டது.



"நீங்கள் எப்போது உத்தமத்திலே சேர்ந்துகொண்டீர்கள் என்பதையேனும் காலவரையறைப்படி சரியாக நீங்கள் சுட்டிக்காட்டவில்லை. .....நீங்கள் சேர்ந்து கொண்டது மிக மிகப் பின்னான காலகட்டத்திலே. அனைத்தும் நடந்து
முடிந்து. "


ஆமாம். அதற்கென்ன இப்போது. நான் உத்தமத்தின் ஆரம்பகால உறுப்பினர், நிறுவனர் என்றா என் பதிவில் சொல்லியிருக்கிறேன்?
ஆனால் நான், உத்தம மாநாடுகளுக்கு முன்னோடியாக அமைந்த, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் 1997ம் ஆண்டு மே 17-18 தேதிகளில் சிங்கப்பூரில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாட்டில் (அப்போது அது Tamilnet 97 என்றழைக்க்ப்பட்டது) அமைப்புக் குழுவினரின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன். அது குறித்து வெளியிடப்பட்ட சுருக்கமான அறிக்கையில் காணப்படும் வாசகங்கள் இவை:
"The 2 hour-long discussion session on the second day of the symposium came to a fruitful ending. The discussion panel (a total of 11 members) was led by Sujatha and included N. Anbarasan, S Kuppuswami, ST Nandasara, Kuppuswamy Kalyanasundaram, Malaan, Harold Schiffman, Vasu Renganathan, Muthelilan Murasu Nedumaran, Naa Govindasamy and Tan Tin Wee. The topics discussed includes -
Increasing Tamil Content Worldwide
Keyboard Diversity
Encoding Standards
Standardization of Tamil Websites and WebPages
Work to be done/Time Frame
Next Symposium - TamilNet'98
இதனை http://www.tamilnation.org/digital/tamilnet97/Tamilnet97.htm என்ற இடத்தில் பார்க்கலாம்.
இந்த மாநாட்டின் படங்கள் உத்தமம் இணையதளத்தில்இருந்தன.அண்மையில் அந்தத் தளம் சீரமைக்கப்பட்ட போது அவை நீக்கப்பட்டுவிட்டன.


"உத்தமம் வருவதற்கு முன்னாலே அதற்கு முன்னான ஆரம்பக்குழுக்களும் வெப்மாஸ்ரர் மின்னஞ்சற்பட்டியல் விவாதங்களிலும் நீங்களிருந்தீர்களா?" என்பது உங்களது மற்றொரு கேள்வி.
பதில்: இல்லை.அப்படி இருந்ததாக இந்தப் பதிவில் மட்டுமல்ல நான் எங்கும் குறிப்பிடவில்லை.முதலில் நான் இணைய அறிஞர் அல்ல்.இணையப் பயனர்.97ல் நடந்த மாநாட்டிற்குப் பிறகு, எழுத்துருக்களைத் தரப்படுத்துவது
பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்து விட்ட்ன. 1999ல் சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் வரவேற்புரையில் முரசொலி மாறன் குறிப்பிட்டது போல, "இன்று சுமார் 350 மென்பொருள்கள்
கணிப்பொறியில் உலாவந்து கொண்டிருக்கின்றன். இது உண்மையிலேயே பெருமைக்குரிய செய்திதான்.ஆனால் ஒவ்வொருவரும் ஒரு தமிழ் வடிவக் குறியீட்டு முறையைக் கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது -
ஒவ்வொருவரும் தனித்தனி அலைவரிசையில் ஒலி பரப்புவது போல.)விளைவு என்ன? இன்று இண்டர்நெட் இணையத்தில் 350 "தமிழ்கள்" இடம்பெற்றிருக்கின்றன. அதாவது - ஒரு மென்பொருளில் தயாரிக்கப்பட்ட
தமிழ்ச் சொற்களை மற்றொன்று ஏற்றுக்கொள்ளாது. இதனால் கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் தமிழர்கள் தனித் தனித் தீவுகளாக தொடர்பின்றி நிற்கிறார்கள்"


நான் மென்பொருள் வல்லுநர் அல்ல. இந்த பிரசினைக்குத் தீர்வை முன்மொழியக் கூடிய தொழில்நுட்ப அறிவு என்னிடம் இல்லை. எனவே எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற மனநிலையில் ஒதுங்கி இருந்தேன். அதை என் வலையுலக நண்பர்க்ளிடமும் தெரிவித்து விட்டேன். பின்னால் எல்லாம் முடிந்து (99 மாநாட்டிற்குப் பின்னும் சர்ர்ச்சை தொடர்ந்து கொண்டுதானிருந்தது) யூனிக்கோடின் வருகைக்குப் பின்னர்தான்
இணையத்தில் தமிழ் பற்றிய முயற்சிகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். நான் தகவல் பரிமாற்றத் (Communication) துறையைச் சேர்ந்தவன். ஆளுக்கொரு எழுத்துரு வைத்துக் கொண்டு நான் எழுதுவது உனக்குப் புரியாது என்று சர்ச்சித்துக் கொண்டிருக்கும் இடத்தில் எனக்கென்ன வேலை?


"மைக்ரோஃஸொப்டின் ஒருகூற்றினைத் தமிழ்ப்படுத்தும் நோக்குடன் இறங்கியபோது (இதைக்கூட தன்னார்வத்தொண்டெனச் சொல்லிவிட முடியுமாவெனத் தெரியவில்லை)"


சந்தேகமே வேண்டாம். அந்த முயற்சிக்காக நான் ஒரு பைசா, சதம், சென்ட், டாலர், எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.பொருளாகவும் பெற்றுக் கொள்ள்வில்லை. அவர்கள் ஒரு மென் பொருளை அளிக்க முன் வந்த போதுகூட அதை விலை கொடுத்துத்தான் வாங்கிக் கொண்டேன். முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டாகத்தான் செய்தேன்.இரவு 10 மணி செய்தி அறிக்கை ஒளிபரப்பான பின் வீடு திரும்பி, இரவு 12 , 1 மணிவரை இதில் கவனம் செலுத்திதான் அந்தப் பணியை செய்து முடித்தேன். தமிழ் ஆர்வம் உங்களுக்கு மட்டும்தான் உரியதா? இந்த அணில்களும் முதுகில் மண் சுமக்க முடியும்.


கணிச் சொற்களை நான்தான் முதலில் செய்தேன் என்றும் எங்கும் சொல்லவில்லை. நான் மேற்கொண்ட முயற்சிக்கு முன்னரே. பல அகராதிகள் வழக்கில் இருந்தன என்பதையும் நானறிவேன். நான் சொல்லியிருப்பதெல்லாம் நான் அந்த முயற்சியில் பங்களித்தேன் என்பதைத்தான்.



யார் யார் எப்போது வலைப்பதிவுகள் துவக்கினார்கள் என்பதெல்லாம் அவரர்கள் profile பக்த்திலேயே இருக்கிறது. (அப்போது எல்லோரும் பிளாக்கரில்தான் துவங்கினார்கள்) யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.


இனி 'சுதேசமித்ரன் பாரம்பரியம்' பற்றி:


உலகில் எந்த வரலாறுமே எழுதுபவரின் பக்கச் சார்போடுதான் எழுதப்பட்டு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. 1857ல் நடந்த்து ஆங்கிலேயர்கள் பார்வையில் சிப்பாய் 'கலகம்'. இந்தியர்களுக்கு அது முதல் சுதந்திரப் போர்.



தமிழ் இலக்கிய வரலாறும் இதற்கு விலக்கல்ல. தமிழின் முதல் சிறுகதையை எழுதியவர் வ்.வே.சு எனவும் இல்லை பாரதி எனவும், வட்டுகோட்டை ஆர்னல்டு என்ற சதாசிவம் என்றும் அதற்கும் முன்னரே சிங்கப்பூர் மக்தூம் சாய்பு எழுதிவிட்டார் எனவும் வாதங்கள் உண்டு.தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் இல்லை, அது ஆதியோர் அவதானி என்ற கவிதை வடிவில் எழுதப்பட்ட நாவல்தான் எனச் சிட்டியும் சிவபாத சுந்தரமும் பிரிட்டீஷ் மியூசியத்திலிருந்த பிரதி ஒன்றைத் தூசி தட்டி எடுத்து நிறுவினார்கள். ஆனால் அண்மையில் கூட, இதை ஏற்க மறுத்த கி.ராஜநாராயணனுக்கும் எனக்குமிடையே மேடை ஒன்றிலேயே
பகிரங்க மோதல் நடந்தது.



சுதேசமிதரனுக்கு முன்பாக இலங்கையில் மட்டுமல்ல, மலேசியாவிலும் தமிழ்ப் பத்திரிகைகள் இருந்திருக்கலாம். "மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: "(கடந்த 130 ஆண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது
காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" என முல்லை இராமையாவை
மேற்கோள் காட்டி மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம், என்ற கட்டுரையில் ரெ. கார்த்திகேசு எழுதுகிறார்.
(காண்க: http://www.yarl.com/forum3/index.php?showtopic=25961&mode=linear) ரெ.காவின் கட்டுரை 2007ல் எழுதப்பட்டதாக வைத்துக் கொண்டால், மலேசியாவின் இதழியல் வரலாறு 1877ல் துவங்குவதாக ஆகிறது. முல்லை இராமையா இதை எழுதியது எப்போது எனத் தெரியவில்லை. அது நிச்சியம்
ரெ.கா எழுதியதற்கு முன்னர்தான். அப்படியான்ல் மலேசியாவின் இதழியல் வரலாறு 1877க்கு முன்பு கூடத் துவங்கியிருக்கக்கூடும்.


நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு மொழியில் இதெல்லாம் இயல்பானது. அதே போல வரலாறு எழுதுகிறவர்கள் அவர்களுக்குரிய சார்புகளோடுதான் எழுதுகிறார்கள். அவரவர் சார்பு அவரவர்களுக்கு;



உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள முத்தையாவின் மேற்கோளையே எடுத்துக் கொள்வோம்:
முத்தையாவின் கட்டுரையில் உள்ள் ராஜவிருத்தி போதினி, தினவர்த்தமானி, சேலம் தேசாபிமமனி பற்றியவாக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தடித்த எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.(Emaphasis முத்தையாவினுடையது அல்ல, என்று கூட நீங்கள் குறிப்பிடவில்லை)



அதே முத்தையா அதே கட்டுரையில் எழுதியுள்ள வரிகளை வாசிப்பவனின் கவனத்திலிருந்து ம்றைத்துவிட்டீர்கள் அவை இவை:


When Subramania Aiyer quit The Hindu 1898, feeling so fettered by his partner that he could not wage his impassioned campaigns for social reforms, he made the Swadesamitran his full-time business. Operating from premises at the rear of Whiteaway's, he made it a thrice-weekly paper, then, in 1899, the first Tamil daily. It was to enjoy this status for 17 years - and even thereafter did not meet any real challenge till Swararajya started in 1925, Tamil Nadu in 1927 and Dinamani in 1934, but they too were unable to shake the Swadesamitran's primacy till the 1950s. (இதில் தடித்த எழுத்துக்களில் பகுதி என்னால் இடப்பட்டது)


எனவே நீங்கள் குறிப்பிட்டுள்ள முத்தையாவிற்குமே சுதேசமித்திரன்தான் முதல் தமிழ் நாளிதழ். அதை ஏன் நீங்கள் மறைத்துவிட்டீர்கள்? இது என்ன பாரம்பரியம்?


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தக் குறிப்பை நீங்கள் 'நம்பிக்கைக்குரியது' அல்ல எனக் கருதும் இந்து நாளிதழிலிருந்தே எடுத்திருக்கிறீர்கள்!நம்பிக்கைக்குரியதாக இல்லாத ஒரு நாளிதழில்
வெளியாகும் ஒரு நறுக்கை நம்பி நீங்கள் விவாதத்தைக் கட்டமைப்பது விநோதமாக இருக்கிறது. அதை நம்பித்தானே அதை இங்கு பயன்படுத்துகிறீர்க்ள்?


உங்களது இந்த ஒரு செயலே இந்து நாளிதழ் நம்பிக்கைக்குரியது என நிரூபிக்கும். விடுதலைப் புலிகளின் பிரசுரங்கள் மீது உலகில் எத்தகைய நம்பிக்கை நிலவுகிறது என்பதை அவை எத்தனை நாடுக்ளில் தடை
செய்யப்பட்டிருக்கின்றன என்று கணக்கிட்டாலே போதுமானது.


பின்னூட்டங்களில் (உங்களுக்கு அவை பொன்னூட்டமாக இருக்கலாம்) மட்டையடித்துக் கொண்டிருக்காமல், ஆக்கபூர்வமாக ஏதாவ்து செய்யலாமே?


நீங்கள் ஏன் ஒரு வரலாறு- உங்கள் சார்புடனேயே இருக்கட்டும்- எழுதக்கூடாது?

Sunday, July 08, 2007

தொட்டுப் போனவர்களுக்கு நன்றி

நா. கோவிந்தசாமியும் நானும்
நன்றி சொல்வதற்காகத்தான் இந்தப் பதிவு. இதை ஒரு பின்னூட்டமாகப் போடாமல் பதிவாகப் போடக் காரணம் உண்டு. அது அப்புறம்.

முதலில் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எதற்காக? இரண்டு தவறுகள் நேர்ந்துவிட்டன.
1."படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் வழியே திரும்பி வந்தேன். அங்கு நான்யாங் பல்கலைக்கழகத்தில், என் நண்பரும் எழுத்தாளருமான டாக்டர். நா. கோவிந்தசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார்." என்று எழுதியிருந்தேன். நா.கோ. செய்த வேலைகளுக்கும் அதற்குப் பின் இருந்த கடுமையான உழைப்பிற்கும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம்தான். ஆனால் யாரும் கொடுக்கலையே. வசூல் ராஜாவிற்கெல்லாம் டாகடர் பட்டம் கொடுக்கிற போது மெய்யான அறிஞரான அவருக்கும் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் கொடுக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது அவரை 'டாக்டர்' கோவிந்தசாமி என்று நான் எழுதியது தவறுதான். பேராசிரியர் நா.கோவிந்தசாமி என்றுதான் எழுத வந்தேன். அதற்குள் ஏதோ தொலைபேசி அழைப்பிற்குக் காது கொடுத்துவிட்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தபோது, அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துவிட்டேன்.அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அந்தத் தவற்றை என் பதிவில் திருத்திக் கொண்டிருக்கிறேன்.
இந்த தவற்றைப் பெயரில்லா பெரிய்மனுசன் ஒருவர், எள்ளலோடு ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். அவருக்கு நன்றி. அந்தப் பெயரில்லாப்
பெரியமனுசன், என் பதிவுக்கு வந்து பின்னுட்டம் போட்ட்டுச் சொல்லலை. எனக்கு ஒரு மின்னஞசல் மூலமும் தெரிவிக்கவில்லை.தானாக ஒரு பதிவு எழுதியும் பதிவு செய்யவில்லை. போகிற போக்கில், வேறு ஒரு பதிவில்,
கிடைத்த சந்துக்குள் சந்தடி செய்துவிட்டுப் போயிருக்கிறார். என்றாலும் அவருக்கு நன்றி.

2. " காசியும் அவரது நண்பர்கள் உதவியோடு நிறைய உழைத்து அந்தத் திரட்டியை நிறுவினார்" என்று தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்த
வரிகளை மீண்டும் படிக்கிற போது, காசி தன் நண்பர்களோடு சேர்ந்து தமிழ்மணம் திரட்டியை ஆரம்பித்தார் என்று சிலர் அர்த்தம் கொள்ள
வாய்ப்பிருக்கிறது என்று தோன்றியது. அப்படிப் புரிந்து கொண்டால் அது தவ்றாகிவிடும். காசி த்னியொருவராக உழைத்துத்தான் அந்தத் திரட்டியை
நிறுவினார். அவ்ர் அதை நிறுவிய பின் அதை நிர்வகிக்கும் பொறுப்பில் அவரது நண்பர்கள் இணைந்து கொண்டார்கள். அந்த நண்பர்கள் நிர்வாகத்தில்
செலுத்திய உழைப்பும் ஆர்வமும் கணிசமானதுதான். ஆனால் தமிழ்மணத்தை ஆரம்பித்தது காசிதான். இதையும் பதிவில் சரி செய்திருக்கிறேன்.
இனி இரண்டு பதிவுகளுக்குமான நன்றி. ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி நன்றி சொல்ல வேண்டும்தான். ஆனால் இந்தப்பதிவுகளையே, அல்லது
எட்டுப் போடுகிற விளையாட்டையே ஏதோ இமேஜை நிலைநிறுத்திக்கிற உத்தி என்றெல்லாம் ஒன்றிரண்டு பேர் முணுமுணுத்துக் கொண்டு
இருக்காங்க. அப்படியிருக்கும் போது பெயர் சொல்லி நன்றி சொல்ல ஆரம்பித்தால் ஏதோ பின்னூட்டமிட்டவர்களது நல்ல புத்தகத்தில் நான் இடம் பெற முயற்சிப்பதாகவோ, அல்லது ரசிகர் மன்றம் ஆரம்பிப்பதாகவோ புரளி கிளப்பலாம். எனவே தனித்தனியாகப் பெயர் சொல்லிப் பின்னூட்டம் போட்டு,
(பின்னூட்டத்தின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கிக் கொண்டு) நன்றி சொல்லப்போவதில்லை. சிலரது பின்னூட்டங்கள் சிந்தனையைக் கிளப்பின. அந்த சிந்தனைகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
கலக்கிட்டீங்க, அசத்திடீங்க, சூப்பர், சுவாரஸ்யமாக இருந்தது, என்றெல்லாம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய
செந்தழல் ரவிக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, ஒரு சில வார்த்தைகள்.இது போன்ற அனுபவங்கள் ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடைக்கிற
அனுபவங்க்ள். நான் பத்திரிகையாளனாக இல்லாமல் கணினி நிரல் எழுதுபவனாகவோ, வங்கிக் கணக்கு எழுதுகிறவனாகவோ பணியாற்றியிருந்தால் இந்த அனுபவங்கள் கிடைத்திருக்காது. இது மாலனுக்குக் கிடைத்த அனுபவங்கள் அல்ல்.மாலன் என்ற பத்த்ரிகையாளனுக்குக் கிடைத்த அனுபவங்கள். நீங்களும் ஒரு பத்திரிகையாளனாக 25, 30 வருஷம் குப்பை கொட்டினால் உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்க்லாம்.

'நீங்கள் போட்ட விதையால் வளர்ந்த மரத்தின் பழங்களைத்தான் நாங்கள் இன்று சுவைக்கிறோம்' என்று இலவசக் கொத்தனார் (சங்கப் புலவர் மாதிரி
என்ன ஒரு பெயர்!) தெரிவித்திருக்கிற நன்றியோ, மகிழ்ச்சியோ எனக்குரியது அல்ல.கணினியில் தமிழ் இடம் பெற உழைத்த பெருமக்கள் பலர். முதல்
தமிழ் எழுத்துருவை உருவாக்கிய முனைவர் ஆதமி ஸ்ரீநிவாசன், பேராசிரியர்.ஜார்ஜ் ஹார்ட், மயிலை எழுத்துருவை உருவாக்கிய
முனைவர்.கல்யாணசுந்தரம், பாரதி என்ற நிரலியை உருவாக்கிய முத்துக்கிருஷணன், .இணையத்தில் தமிழ் தோன்ற உழைத்த பேராசிரியர்
நா.கோவிந்தசாமி, கணியில் தமிழில் எழுதுவதை எளிமையாக்கிய முத்து நெடுமாறன், பாலாபிள்ளை, முகுந்தராஜ், அன்பரசன், வலைப்பதிவுகள்
வலுப்பெறக் காரணமான பத்ரி, காசி, மதி என் அந்தப் பட்டியல் நெடியது. நீங்கள், நான், எதிர்காலத் தலைமுறை எல்லாம் நன்றி பாரட்ட வேண்டியது
இவர்களுக்குத்தான். மதுமிதா வலைப்பதிவுகள் பற்றி ஒரு நூல் எழுதப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாராவது கண்னியில் தமிழ் வந்த வளர்ந்த வரலாற்றை எழுதலாம். அதை வலைப்பதிவுகளில் எழுதினால் உடனுக்குடன் தகவல் பிழைகள் ஏற்படாமல் சரி செய்து கொள்ள முடியும்.

"தமிழை இணையத்தில் பார்ப்பதற்காக இத்தனை பேர் பட்ட பாடுகளை பார்க்கையில், மறுபடியும் கொஞ்சம் சுறுசுறுப்பாக எழுதலாமா என்று கூடத்
தோன்றுகிறது. ஆனால் இன்னொரு ஓரத்தில் " அடப் போங்கப்பா..நம்முடைய நேரத்தை உபயோகப்படுத்தி வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா
என்றும் தோன்றி விடுகிறது. இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இணையத்தில் கோஷ்டியும் அரசியலும் மலிந்த பிறகு முன்னைப் போல உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் எழுத முடிவதில்லை. தமிழனின் சாபக்கேடு அவன் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த வசதிகளையே அவன் உபயோகிக்க விடாது.." என்ற மூக்குசுந்தரின் மனச் சோர்வு, பலருக்கும் தோன்றி மறைகிற ஒரு சோர்வு. "வலைப் பூக்களில் என்ன ரிப் வான் விங்கிள் மாற்றம்?அதே சாதி அரசியல் தான்.அதே அசிங்க,மிரட்டல் பின்னோட்டங்கள்தான்!" என்ற சீனியின் ஆதங்கமும் இப்படிப்பட்ட ஒரு மனச் சோர்வின் வெளிப்பாடுதான்.எனக்கும் கூட இந்தச் சோர்வு ஒரு தருணத்தில் ஏற்பட்டதுண்டு.இது போன்ற மனச்சோர்வின் காரணமாக வலையில் எழுத வந்த பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டார்கள்.வேறு வெளியீட்டு வாய்ப்புப் பெற்றவர்கள் ' என்னத்துக்கு? தலையெழுத்தா?' என்ற எண்ணம் தோன்றி விலகிப் போவது இயல்புதான். இங்கு எழுதாததால் அவர்களுக்கு இழப்பு ஒன்றும் இல்லை.
இது ஒருவகையான கலாசாரப் பிரசினை என்று எனக்குத் தோன்றுகிறது.நம் சமூகத்தில் சில நோய்க்கூறான அம்சங்கள் நாளுக்கு நாள் வலுப்
பெற்றுவருகின்றன. விவாதங்களில் பங்கேற்பதற்கான குறைந்தபட்சத் தகுதிகளான, பொறையுடமை, (tolerance) சமனநிலை (Balance) ஆகியவற்றை
விரைவில் இழந்துவிடும் நிலையக் காண்கிறேன். ஒரு பிரசினையில், ஒரு விஷயத்தில் தான் மேற்கொண்டுள்ள நிலைக்கு மாறாக இன்னொருவருக்கு
வேறு கருத்து, நிலைப்பாடு இருக்குமானால், அப்படி ஒரு மாற்று நிலை எடுத்ததற்காக் அவரைக் கண்ட துண்டமாக வெட்டிக் காக்காய்க்குப் போட்டுவிட வேண்டுமெனத் துடிக்கிறார்கள். 'If you are not with me you are against me' என்ற பயங்கரவாதக் குழுக்களின், Fundamentalist குழுக்களின் மனோபாவம் வலைப்பதிவுகளுக்கும் வந்துவிட்டது.

பொது அரங்கில் ஒருவரது கருத்துக்களை தன்னுடைய கருத்துக்களால் வெல்ல முடியாது என்ற நிலை வரும்போதோ, அல்லது அப்படி ஒரு பதற்றம் ஏற்படும் போதோ, எதிராளியை personal levelல் devalue செய்யத் துவங்குகிறார்கள். அப்படி அந்த நபரை devalue செய்வதன் மூலம் அவரது
கருத்துக்களை devalue செய்ய முடியும் என்றோ, அல்லது செய்துவிட்டதாகவோ மனநிறைவு கொள்கிறார்கள். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அப்படி devalue செய்யப்படுகிற நபர் பலநேரங்களில் வலைப்பதிவுகளை எழுதுபவராகவோ, படிப்பவராகவோ இருப்பதில்லை என்பதால் அவருக்கு பதிலளிக்க வாய்ப்பே தரபடாமல் இந்தத் தாக்குதல் தொடரப்படுகிறது. அவர் பதிலளிக்க மாட்டார் என்ற தெம்பில் மேலும் மேலும் அவர் மீது எள்ளலும் கேலியும் தொடர்கிறது. சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை.நம்முடைய அரசியல் கலாசாரத்திலிருந்து பெறப்பட்ட ஒரு சமூக விளைவு இது
இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? 1.இவற்றிலிருந்து விலகி நிற்கும் பொருட்டு வலைப்பதிவுகளிலிருந்தே விலகி நிற்பது; 2.'சண்டைக்கார'
பதிவுகளைத் திறந்தே பார்க்காமல் அலட்சியப்படுத்துவது; 3.சண்டைக்காரர்களை உசுப்பிவிடும் விஷயங்கள் பற்றி வாயே திறக்காமல், முக்கியமில்லாத விஷயங்கள், சின்னஞ் சிறுகதைகள் பேசிப் பொழுதைக் கழிப்பது; இந்த மூன்றில் ஏதோ ஒன்றை அவரவர் வசதிப்படி செய்து கொண்டிருக்கிறோம்.
நான்காவதாக இந்தப் பதிவுகளுக்கு பதிலாக் ஆரோக்கியமான பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.ஆனால் இது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல. பாலில் தண்ணீர் அதிகம் கலக்கப்பட்டுவிட்டதென்றால், தண்ணீர் கலக்காத பாலையோ, பால்பவுடரையோ கூடுதலாகச் சேர்த்துப் பாலின் தரத்தை உயர்த்த முடியும். ஆனால் பாலில் விஷம் கலக்கப்பட்டுவிட்டதென்றால், அந்தப் பாலைக் குப்பையில் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.ஊரில் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதென்றால் அவற்றிடமிருந்து விலகிப் போவது ஒரு வழி. அவ்ற்றைப் பிடிக்க நகர்மன்றத்திடம் மன்றாடுவது ஒரு வழி. நகர்மன்ற்ம் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மறுத்ததென்றால் நகர்மன்றத்தையே மாற்ற முயற்சிப்பது
இன்னொரு வழி. தனிந்பர் துதிகளுக்கோ, தாக்குதல்களுக்கோ இடமளிக்காத பதிவுகளை, சுயக் காதலைத் துறந்த பதிவுகளை, ஜல்லியடிக்காத,
கும்மியடிக்காத சாரமுள்ள பதிவுகளை மட்டும் அனுமதிக்கிற ஒரு திரட்டியை உருவாக்கமுடியாதா? திரட்டியைப் பற்றி யோசிக்க வேண்டிய காரணம்,
அது வெறும் தொழில்நுட்ப வசதி அல்ல, ஒரு பொது அரங்கு என்பதால்.

அப்படி ஒரு 'இலட்சியப் பொது அரங்கு' ஏற்படுகிற வரை சில நடத்தை நெறிகளை நாம் நமது பதிவுகள், பின்னூட்டங்களைப் பொறுத்தவரை
பின்பற்றலாம்: அவை:
  1. தனிநபர் புகழ்ச்சி, தனிந்பர் தாக்குதல் இல்லாமல் பதிவுகளை எழுதுவேன். பின்னூட்டம் இடுவேன், பின்னூட்டங்களைப் பிரசுரிப்பேன்.
  2. எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்
  3. மாற்றுக் கருத்துக்களை பொறுமையுடனும், சமனுடனும் அணுக முயற்சிப்பேன்;
  4. ஒருவரது கருத்துக்களை மறுப்ப்தையோ, நிராகரிப்பதையோ, தரவுகளின் அடிப்படையில் செய்வேன்
  5. தான் சார்ந்துள்ள ஜாதி, மதம், அரசியல் கட்சி, அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரம் இவற்றை மற்றவர்கள் மீது திணிக்கும் வன்முறையை
    அனுமதியேன்.
  6. வெறும் பரபரப்பிற்காக்வோ, கவனம் பெறவோ, எழுதுவதையும் அப்படி எழுதுவதையே தங்கள் இயல்பாகக் கொண்டவர்களையும் தவிர்ப்பேன்
    ஓசை செல்வா, நீங்கள் கேட்டிருந்த " Many to Many communication ல் (web/blog/groups etc) உள்ள சவால்கள்" பற்றிய கேள்விக்கான விடைகளில் சில மேலே உள்ளன. இவற்றைத் தொடர்ந்து இன்னொருநாள் விவாதிப்போம்- ஒர் தனிப்பதிவாக
    "எனக்கு இது நாள் வரை உங்கள் எழுத்துகள் மீது எந்த ஒரு பிடிப்போ நம்பிக்கையோ இருந்தது கிடையாது, உங்களை மட்டும் அல்ல இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அந்த பட்டியலில். ஆனால் உங்கள் எட்டுப்பதிவை படித்த பிறகு ,எனது நிலைப்பாட்டினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமோ என்று தோன்றுகிறது. இது நாள் வரையில் சன் டி.வியில் தங்களை காணும் பொழுது எல்லாம் வந்துடாங்கய்யானு தான் சலித்துக்கொள்வேன் :-)) " என்று வவ்வால் எழுதியிருந்தார்.
    நன்றி வவ்வால். உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்து என்ற ஒன்று இதுவரை எழுதப்படவே இல்லை. பாரதி மீதும், திருவள்ளுவர் மீதும், ஷேக்ஸ்பியர் மீதும் கூட விமரிசனங்கள் வைக்கப்பட்டதுண்டு. இதற்குப் பல காரணங்கள். பெரும்பாலும் ஒருவரது எழுத்தைப் படிக்கும் முன்னர் அவரைப் பற்றி ஏதோ ஒரு விதத்தில் கேள்விப்பட்டுவிடுகிறோம். அல்லது அவரை வேறு ஒரு தளத்தில் 'சந்தித்து' விடுகிறோம். இது அவரது எழுத்தைப் பற்றி நமக்குள் அதைப் படிக்காமலேயே ஒருவித மனச்சாய்வை ஏற்படுத்தி விடுகிறது. அவரது மூக்கு, அல்லது அவரது ஜாதி, அல்லது அவரது அரசியல் சார்பு, அல்லது அவர் தனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளரைப் பற்றி வெளியிட்டிருந்த கருத்து ஏதோ ஒன்று அவருக்கு எதிரான ஓர்
    மனோபாவத்தைத் தோற்றுவித்துவிடுவதுண்டு. பெரும்பாலும் நாம் ஒரு தனிநபரை ஊடகங்கள் ஏற்படுத்திய சில பிம்பங்கள், பிரமைகளுக்கு அப்பால் காண்பதில்லை. என் எழுத்துக்களையோ அல்லது என்னையோ உங்களுக்குப் பிடிக்காமல் போனதற்கும் காரணங்கள் இருக்கலாம். நான் கேட்டுக் கொள்வதெல்லாம், என்னை மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பாளியையும் அவனது ப்டைப்புக்களைப் படித்து, ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது அவனை நீங்கள் நிராகரிக்கக் கூடச் செய்யலாம்.ஆனால் அது ஒரு தேர்ந்த முடிவு.(Discerning opinion). ஒருவேளை நீங்கள் என்னைப் படித்ததற்குப் பின்தான், உங்களது முடிவுகளுக்கு வந்திருந்தீர்கள் என்றால் அதுவும் எனக்கு உடன்பாடுதான். உங்கள் கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை உண்டு.

நான் அழைப்பு விடுத்தவர்களில் உதயச் செல்வி, நிலா, மதுமிதா, ராம்கி, ராகவன் தம்பி ஆகியோர் எழுத இசைந்திருக்கிறார்கள்.உண்மைத் தமிழன் எழுத ஒன்றுமில்லை என நாசூக்காக மறுத்துவிட்டார். அண்ணாக்கண்ணன், பாலுமணிமாறன் ஆகியோரிடமிருந்து எதிர்வினைகள் ஏதுமில்லை. இதுதான்
இன்றைய எழுத இசைந்தவர்களுக்கும், எழுத இயலாது போனவர்களுக்கும் கூட நன்றி
. .


Thursday, July 05, 2007

விட்டுப் போன எட்டு

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது.
***

'தமிழரது அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம்' என்று பாரதியின் ஒரு மகா வாக்கியம் ஒன்றுண்டு. தமிழன் என்ற பெயரில் எழுதியதாலோ என்னவோ, பாரதி அந்த வாக்கியத்தை எனக்காகவே சொன்னமாதிரி எனக்கு ஒரு நினைப்பு. அந்த நினைப்பில் (அசட்டுத்) துணிச்சலான காரியங்களை அவ்வப்போது செய்வதுண்டு.

அப்படி செய்த ஒரு காரியம்தான் ·புளோரிடா பல்கலைக்கழகத்தில் என் முதுகலைப்படிப்பின்போது, மின்னிதழிற்கு ஒரு முன்மாதிரியை (Prototype for an electronic newspaper) உருவாக்குவது. அமெரிக்கா கிளம்புவதற்கு ஒரு மாதம் முன்பு வரை கணியியில் பழக்கம் ஏதும் கிடையாது. அப்பே¡து வீட்டில் கணினி இல்லை. இந்தியா டுடே அலுவலகத்திலும் ஆசிரியப் பகுதியில் கணினி வந்திருக்கவில்லை. ஆனால் நான் என் புராஜக்கெட்டிற்கு நான் எடுத்துக் கொண்ட விஷயம் மின்னிதழிற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்குவது. அந்த முன் மாதிரியை ஒட்டிப் பல்கலை நிர்வாகம் ஒரு மின்னிதழை நடத்தக்கூடும் எனப் பேச்சிருந்ததால் மாணவர்களிடையே ஒரு உற்சாகமான ஆர்வம் இருந்தது.

நாங்கள் ஏழு பேர் ஒரு குழு. இதழியல் கல்லூரியிலிருந்து நாங்கள் மூவர். கணினிப் பொறியியல் மாணவர்கள் இருவர், ஓவியக் கல்லூரியிலிருந்து ஒருவர். சட்ட மாணவர் ஒருவர். இந்த மாதிரி மூன்று குழுக்கள்.

அப்போது BBS என்று ஒன்றிருந்தது. Bullettin Board System என்ற அது கிட்டத்தட்ட வலைப்பதிவுகள் மாதிரி. ஆனால் LAN வழியே செயல்படுவது. முந்திரிக்கொட்டை முதல் குழு அந்தத் தொழில் நுட்பத்தை எடுத்துக் கொண்டது. இன்னொரு குழு, AOL நெட்வொட்க்கைப் பயன்படுத்தத் தீர்மானித்தது. எங்கள் மின்னிதழ் உலகு தழுவியதாக இருக்க வேண்டும், மல்டி மீடியா இருக்க வேண்டும் என்று பேராசை எங்களுக்கு. ஆனால் அப்போது internet explorer வந்திருக்கவில்லை. நெட்ஸ்கேப் அறிமுக நிலையில் இருந்ததாக ஞாபகம்.

என்னடா, ஆரம்பமே கண்ணைக் கட்டுதே என்று திகைத்துப் போய், என்ன செய்வது என்று ஆங்காங்கே விசாரித்த போது, NASA வின் துணை அமைப்புக்களில் ஒன்றான, NCSCA (National Center for Super Computing Applications) என்ற ஒரு அமைப்பிடம், மொசைக் என்ற ப்ரெளசர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி இரவல் வாங்கி வந்து வேலையை ஆரம்பித்தோம். என் வேலை பத்திரிகைக்கு விஷயம் தயாரிப்பது, என் சகா எழுதும் விஷயத்தை எடிட் செய்வது, எல்லா விஷயங்களையும் ஹைப்பர் டெக்ஸ்டில் எழுதி அதாவது tag போட்டு வலையேற்றத் தயாராக வைப்பது. இப்போது போல் HTML என்ற பித்தானை அமுக்கி எழுதியவற்றை அப்போது மாற்றிவிட முடியாது. எல்லாவற்றையும் <-- -/> என்று மாற்றியாக வேண்டும். அதனால் மணிக்கணக்கில் கணினி முன் உட்கார்திருக்க வேண்டி வந்தது. இந்தக் கணினிக் காதல் பிறந்தது அப்போதுதான்.

படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் வழியே திரும்பி வந்தேன். அங்கு நான்யாங் பல்கலைக்கழகத்தில், என் நண்பரும் எழுத்தாளருமான பேராசிரியர். நா. கோவிந்தசாமி பணியாற்றிக் கொண்டிருந்தார். கணினிக்குள் தமிழைக் கொண்டு வந்த முன்னோடிகளில் ஒருவர். கணியன் என்ற எழுத்துருவை உருவாக்கியவர். அப்போது தமிழ் கணினிக்குள் வந்திருந்ததே தவிர இணையத்திற்குள் வந்திருக்கவில்லை. என் மொசைக் அனுபவங்களையும், HTML அனுபவங்களையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த நிமிடமே ஏதாவது செய்து இணையத்தில் தமிழை ஏற்றிவிடமுடியுமா என கோவிந்தசாமி துடித்தார். நான்யாங் பாலிடெக்க்னிக்கில் அவரது அறையில் அமர்ந்து அவரது கணினியில் சில தமிழ்வாக்கியங்களை ஹைப்பர் டெக்ஸ்டில் எழுதிப்பார்த்தோம். ஆனால் இணையத்தில் ஏற்றிப்பார்த்தால் தரப்படுத்தப்படாத எழுத்துரு என்பதால் உதைத்தது.

கிட்டத் தட்ட ஒருவருடம் கழித்து. (1995 அக்டோபர் என ஞாபகம்) திடீரென்று ஒரு நாளிரவு கோவிந்தசாமி போனில் கூப்பிட்டார்." போட்டாச்சு மாலன், போட்டாச்சு!" என்று கூவினார். எனக்கு அவர் விளக்காமலே என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்று புரிந்து விட்டது. " என்ன போட்டீர்கள், கவிதையா, கதையா?" "கவிதைதான். சோதனை முயற்சி என்பதால் சுருக்கமாக நான்கு வரி போட்டுப்பார்க்கலாம் என்று கவிதைதான் போட்டேன்" "என்ன கவிதை? அகர முதல எழுத்தெல்லாமா?" " படிக்கிறேன் கேளுங்க: யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவ்வற்றோரன்ன......" கணியன் பூங்குன்றனின் கவிதை முழுக்க அவர் குரலில் வாசித்தார்." பொருத்தமான கவிதைதான். ஆமாம் தீதும்
நன்றும் பிறர் தர வாரா. நம் இணையத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.நமக்கு, அதாவது தமிழர்களுக்கு வேறு யார் செய்து தரப்போகிறார்கள்?" தொலைபேசியை வைத்து விட்டேன். அன்று நான் தூங்க வெகு நேரம் ஆயிற்று. கோவிந்தசாமியைப் போல் என் மனமும் ஓர் விவரிக்க முடியாத சந்தோஷத்தால் நிரம்பியிருந்தது.

இன்று கோவிந்தசாமி இல்லை. ஆனால் இணையத்தை ஒவ்வொரு முறை துவக்கும் போதும் அவரை நினைத்துக் கொள்கிறேன். அவர் முயற்சியில் நடைபெற்ற முதல் தமிழ் இணைய மாநாட்டிலும் கலந்து கொண்டேன். அதில் என் ஹைப்பர் டெக்ஸ்ட் அனுபவங்கள் பற்றி கட்டுரை வாசித்தேன். அதன் கட்டுரைகளைத் தேர்வு செய்யும் குழுவிலும் இருந்தேன். அந்த உறவின் நீட்சிதான் உத்தமம் அமைப்பில் பங்கு கொண்டது. குமுதத்தின் மின்னிதழை வலையேற்றியது. மைக்ரோசா·ப்ட் அதன் MS Officeஐ தமிழ்ப்படுத்திய போது அதை validate செய்து கொடுத்தது. கணிச்சொல் அகராதியைத் தொகுத்தது. முதன்முதலில் யூனிகோடில் அமைந்த தமிழ் மின்னிதழ் திசைகளைத் துவக்கியது எல்லாம்.

எல்லாம் கோவிந்தசாமி போட்ட பிள்ளையார் சுழி.
****
நந்தகுமார் +2 படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறிய மாணவர்களில் ஒருவன். பொறியியற் பிரிவில், வரைவியல் (draftsmanship) பாடத்தில் முதலாவதாக வந்திருந்தான். அவனது கிராமம் வேலூருக்குப் பக்கத்தில். பிரதான சாலையில் இறங்கி ஆறு கீ.மீ தூரம் நடந்து போக வேண்டும்.அவனது கிராமத்தில் அவனது வீட்டிற்கு எங்கள் செய்தியாளர் போன போது, அவன் வீட்டில் இல்லை. கூரையில் எலி செத்து நாறிக் கொண்டிருந்தது. அதைத் தேடி எடுத்துப் போடக் கூட வீட்டில் ஆண்பிள்ளைகள் இல்லை. நந்தகுமாரும் அவனது தந்தையும் வயல் வேலைக்குப் போயிருந்தார்கள்.
குமுதம் பத்திரிகையிலிருந்து ஆள் வந்திருக்கிறது என்று தெரிந்ததும், அவனை எங்கெல்லாமோ தேடி சைக்கிளில் பின்னால் உட்கார்த்திக் கூட்டி வந்தார்கள். கிராமத்துப் பையன்களுக்கு நகரத்து ஆட்களிடம் உள்ள கூச்சத்தோடு அவன் பேசினான். இனிமேல் படிக்கப் போவதில்லை என்று தெ
ளிவாகச் சொன்னான். காரணம் சொல்ல மறுத்தான். சொல்லாமலே புரிந்தது, வறுமை. மேலும் படிப்பதானால் மேலும் செலவு. குடும்பத்திற்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறான் என்று புரிந்தது. +2வில் மாநிலத்தில் முதலாவதாக வந்துவிட்டு, வறுமை காரணமாக மேலே படிக்கப்போவதில்லை என்றால் என்ன கொடுமையடா இது! என்று மனம் குமுறிய எங்கள் செய்தியாளர் அவனிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவன் காது கொடுக்கத் தயாராக இல்லை. வெறுத்துப் போய் கிளம்ப ஆயத்தமானார் அவர். அப்போது சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது. நந்தகுமாரின் தாய் நிருபரின் காலில் விழுந்து, " என் மகனுக்கு ஏதாவது வழி பண்ணுங்கய்யா!" என்று மெல்ல விசும்பினார்.

மகன் மேலே படிக்க வேண்டும் எனத் தாய் விரும்புகிறார். அவர் எண்ணம் நியாமானது. மகன் மேலே படிக்கத் தயங்குகிறான். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. என்னசார் செய்யலாம் என நிருபர் என்னிடம் கேட்டார். தாய் விரும்புவதற்கும், மகன் தயங்குவதற்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். வறுமை. இதற்கு ஒரு தீர்வு கண்டால் நாம் பிரசினையைத் தீர்த்துவிடலாம் எனத் தோன்றியது.

அந்தவாரக் குமுதத்தில் நந்தகுமாரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். வாசகர்கள் மனதோடு அந்தக் கட்டுரை பேசியிருந்திருக்க வேண்டும். உலகின் பல மூலைகளிலிருந்தும் பண உதவிகள் வரத் துவங்கின. அவற்றில் பல எளிய நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தன. அந்தக் கொடைகளில் ஏதேனும் ஓரு ஓரத்தில் உழைப்பின் வாசனையோ, கண்ணீரின் ஈரமோ இருந்தது. இன்னும் நினைவிருக்கிறது. சென்னைப் பொது மருத்துவ மனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு செவிலியர், தன் பாரியான உடம்பைத் தூக்கிக் கொண்டு மூச்சு வாங்க மூன்றுமாடி ஏறி என் அறைக்கு வந்து காத்திருந்தார். அவருக்கு ஆர்த்ரைடீஸ் பிரசினை வேறு. நீங்கள் கீழே இருந்து இண்டர்காமில் அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றேன்.
நான் கொடுக்கப்போவது ரொம்ப சொல்பத்தொகை, அதற்காக உங்களை இழுத்தடிப்பது சரியல்ல என்று பதிலளித்தார். அவர் கொடுத்தது அதிகம் அல்ல. சில நூறு ரூபாய்கள். அவர் தயங்கியபடியே, ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டு சொன்னார்." நிறையக் கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனா ரிட்டையர் ஆயிட்டேன். பென்ஷன்தான் ஒரே வருமானம். ஸாரி.." என்று நிறைய ஸாரி சொன்னார், ஏதோ தப்புச் செய்து விட்டது போல.

இதற்கிடையில் நநதகுமார் நுழைவுத் தேர்வு எழுதினான். அந்த மதிப்பெண்களையும் கூட்டிப் பார்த்த போது அவனது ராங்க் மிகக் கீழே இருந்தது. அரசுக் கல்லூரிகளில் இலவச இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

தங்கபாலு, (ஆம். காங்கிரஸ் எம்.பி.தான்) சென்னைக்கருகில் ஒரு பொறியியற் கல்லூரி நடத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் நந்தகுமாரின் நி¨லயைச் சொல்லி ஒரு இடம் கொடுக்க முடியுமா எனக் கேட்டேன். நன்கொடையெல்லாம் கொடுக்க முடியாது என்று சொன்னேன். அவர் நன்கொடை மட்டுமல்ல, நான்காண்டுகளுக்கும் கல்விக் கட்டணமே வேண்டாம் என்று சொல்லி இடம் கொடுத்தார். முதலாண்டிற்கான புத்தகங்களை என் மகன் கொடுக்க முன் வந்தான்.

இப்படியெல்லாம் இறுக்கிப் பிடித்து நான்கு லட்ச ரூபாய் அளவில், புரசைவாக்கம் இந்தியன் வங்கியில் fixed deposit ஆகப் போட்டோம். ஆனால் அவன் தந்தைக்கு இவன் இங்கே இருந்து விவசாய வேலைக்குப் போனால் கூலியாவது வரும், சுமை குறையும் என நினைத்தோம், ஆனால் இவன் படிக்கப் பட்டணம் போனால், இன்னும் நான்கு வருஷங்களுக்குத் தன் ஒற்றை வருமானத்தில் குடுமபத்தை ஓட்ட வேண்டுமே என மலைப்பாக
இருந்தது. அதனால் அந்த fixed depositன் வட்டியை ஒரு சேவிங்க்ஸ் கணக்கில் போடச் சொல்லி அதை அவருக்கு அவ்வப்போது நந்தகுமார் மூலமே கொடுக்க ஏற்பாடு செய்தேன்.

குமுதத்தில் கட்டுரை வந்த கட்டுரையைப் படித்த என்.ராம், பிரண்ட்லைனில் நந்தகுமாரைப் பற்றி எழுதினார். அதைப்படித்த பிரதமர் தேவ கவுடா, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்டக் கலெக்டரை அணுகுமாறு கடிதம் அனுப்பினார். NIIT அவனுக்குக் கணினியில் பயிற்சி அளிக்க முன் வந்தது.

இன்று நந்தகுமார் ஒரு சிவில் என்ஜினியர். அவன் படித்து விட்டு வெளியே வந்த போது அவன் கையில் ஒரு தொழிற்பட்டமும், வங்கியில் நாலு லட்ச ரூபாய் பணமும், கணினிப்பயிற்சியும் இருந்தது.

நான் கையெழுத்துப் பத்திரிகை, இளைஞர் பத்திரிகை, இலக்கியப் பத்திரிகை, செய்திப்பத்திரிகை, வாரப்பத்திரிகை, தினசரிப் பத்திரிகை, சிறு பத்திரிகை, வணிகப் பத்திரிகை, இணையப்பத்திரிகை, உள்ளூர் வானொலி, உலக வானொலி, கல்லூரி வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று
எல்லா ஊடகங்களிலும் நிறையவே குப்பை கொட்டியிருக்கிறேன். இரண்டு பிரதமர்கள், ஒரு ஜனாதிபதியோடு, அவர்கள் பயணம் செய்த தனி விமானத்திலேயே வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறேன். பலநாட்டுத் தலைவர்கள் பங்கு கொண்ட காமன்வெல்த் மாநாடு, இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு என்று பல அக்கப்போர்களை 'கவர்; செய்திருக்கிறேன். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அவற்றின அழைப்பின் பேரில் உரையாற்றியிருக்கிறேன். சென்னா ரெட்டி, பர்னாலா என்ற இரு ஆளுநர்களால் இரு வேறு பல்கலைக்கழகங்களின் செனட்களில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். இவையெல்லாம் என் பத்திரிகை உலகப் பணிக்குக் கிடைத்த பேறுகள்தான். ஆனால் இவை எல்லாவற்றையும் விட மிக உயர்ந்ததாக நான் கருதுவது ஒரு நந்தகுமார் கரையேறிவர என் எழுத்து உதவியதைத்தான்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடுமபமும் ஒரு வறுமை நிலையில் இருக்கும் மாணவனுக்காவது கை கொடுப்பது என்ரு இறங்கினால், இந்தியாவில் வறுமையை ஒழித்துவிட முடியும் என்று நான் இப்போதும் நம்புகிறேன். அப்படி நடந்தால் நமக்கு, 'சிவாஜி'கள் தேவைப்படாது.

*****
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் (இப்போது இந்தியா மண்ணைக் கவ்வியதே அந்தப் போட்டி அல்ல, அதற்கும் முந்தியது) துவங்க இருந்த நேரத்தில் பத்ரியை ஒரு பேட்டிக்காக சன் நியூஸ் தொலைக்காட்சி அரங்கத்திற்கு அழைத்திருந்தோம். அவர்தான் முதலில் Blog பற்றி செ
¡ன்னார். அப்போது Blogகள் ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்தன. அதில் தமிழிலும் எழுத முடியுமா என்று நான் கேட்டேன். பத்ரி என் அலுவலகக் கணினியிலேயே ஏதோ சில முயற்சிகள் செய்து பார்த்தார். சரியாக வரவில்லை. வீட்டுக்குப் போய் முயற்சி பண்ணிவிட்டுச் சொல்கிறேன் என்றார். போய்ச் சில நிமிடங்களில் மின்னஞ்சல் வந்துவிட்டது. போகிற வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு போயிருப்பார் போல. பத்ரி அப்போது (இப்போதும் கூட இருக்கலாம்) இலவச பிளாக்கர் சேவைக்கு பதில் காசு கொடுத்துப் பயன்படுத்தும் சேவையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று ஞாபகம். அதில் 'டைனமிக் எழுத்துருக்களை' நிறுவிக் கொள்ள வாய்ப்பிருந்தது. அதனால் அவரது கணினியில் தமிழ் வேலை
செய்கிறதோ என்று எனக்கு சந்தேகம்.

முதலில் தகுதரத்தில் (TISCII)தான் எழுதிப் பார்த்தோம். என்னுடைய கணினியில், திசைகளுக்காக முத்து நெடுமாறன் கொடுத்த தமிழ் எழுத்துருக்கள் embeded ஆக இருந்தது. அதனால் எனக்கு இந்த வசதிகள் இல்லாத ஒருவர் இலவச பிளாக்கரில் எழுதிப்பார்த்து அது படிக்க முடிந்தால்தான் நிச்சியமாகும் எனத் தோன்றியது. அருணா அந்த பரிசோதனையை செய்தார்.

தமிழின் முதல் பத்து வலைப்பதிவர்கள் என்று பட்டியலிட்டால் அதில் பத்ரி, நான், அருணா, மதி எல்லோரும் இடம் பெறுவோம் என்றுதான் நினைக்கிறேன். நான் பிளாக்கரில் பதியத் துவங்கியது ஏப்ரல் 2003. பத்ரி பிப்ரவரி 2003ல். அருணா மே 2003 என்று ஞாபகம்.மதியும் ஏறத்தாழ பத்ரி துவங்கிய காலத்திலேயே தன் பதிவைத் துவக்கியதாக ஞாபகம்.

தமிழில் வலைப்பதிவுகள் துவங்கமுடியும் என்ற செய்தியை விரிவாக திசைகளில் எழுதினேன். ஆங்காங்கே மடலாடற்குழுக்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தவர்கள் வலைப்பதிவுகளை ஆரம்பித்தார்கள். மதி உடனடியாக ஆக்கபூர்வமாக ஒரு வேலை செய்தார். வலைப்பூக்களின் முக
வரிகளைத் திரட்டி தமிழ் வலைப்பதிவு என்று ஒரு இணையப் பக்கத்தை நிறுவினார். இப்போது நீங்கள் தமிழ்மணத்தில் பார்க்கிற மாதிரியான இடுகைகளைப் பற்றிய குறிப்பெல்லாம் இருக்காது. ஒரு பட்டியல் மட்டும் இருக்கும்.முகவரிகள் ஹைப்பர் லிங்க்கில். நீங்கள் சொடுக்கினால் பதிவிற்குப் போகலாம். ஆனால் அதுதான் தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி வருவதற்கு முன்னோடி. காசி நிறைய உழைத்து அந்தத் திரட்டியை நிறுவினார். வலைப்பதிவு எழுதுகிறவர்கள் உற்சாகம் அடைந்தார்கள். வலைப்பூக்களின் எண்ணிக்கை கிடுகிடுவென வளர ஆரம்பித்தது.

கூடவே பிரசினைகளும். ஆபாசப் பின்னூட்டங்கள், குறிப்பாக பெண்களின் பதிவுகளில் தலைகாட்டத் துவங்கின. போலிப் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன. அதையெல்லாம், திரட்டியை நிர்வகிப்பவர்கள் என்ற முறையில், தமிழ்மணம் நிர்வாகிகள் ஏதாவது செய்து நிறுத்த வேண்டும் என நான் நினைத்தேன். அதைக் கோரி வாதிட்டும் வந்தேன். ஆனால் அவர்கள் அவற்றைப் பற்றி ethics கோணத்தில் சிந்திப்பதை விட, தொழில்நுட்பக் கோணத்தில் பார்த்தார்கள். அது இயல்பானதுதான். ஆனால் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. 'அட, போங்க்கப்பா' என்று பிளாக்கரிலிருந்து ஒதுங்கிக் கொண்டு யாகூ 360ல் வலைபதியத் துவங்கினேன்.

சில ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், ரிப்வான் விங்கிள் 27 வருஷம் தூங்கி எழுந்து ஊருக்கு வந்து பார்த்தமாதிரி எல்லாம் மாறியிருக்கிறது. நிறைய புதிய பெயர்கள்.பழைய பெயர்களை அதிகம் பார்க்க முடிவதில்லை. ஏதாவது எழுதுகிறார்களா, அவையெல்லாம் வேறு எங்கேனும் எழுதிக் கொண்டிருக்கிறார்களா, அல்லது காதும் காதும் வைத்தமாதிரி ரகசியமாக எழுதிக் கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நாம்படித்த கல்லூரிக்கு 25 வருடம் கழித்துப் போய்ப் பார்த்தால் எப்படி ஒருவித ஏக்கமும், மகிழ்ச்சியுமாக இருக்குமோ அப்படி இருக்கிறது.

பத்ரியின் முதல் பதிவு கல்பனா சாவ்லாவின் மரணத்தைப் பற்றியது. சென்டிமென்டலாக யோசிப்பவர்களுக்குக் கொஞ்சம் சங்கடமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இன்று தமிழில் வலைப்பதிவுகள் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இதற்குத்தான் நான் ஆசைப்பட்டேன். இணையத்தில் தமிழ் content அதிகரிக்க வேண்டும், அதுவும் யூனிக்கோடில் எழுதப்பட்ட தமிழ் அதிகரிக்க வேண்டும் என்பதுதான் திசைகள் துவக்கப்பட்டதின் நோக்கம். அதுதான் வலைப்பதிவுகளை வாசக உலகிற்கு நான் அறிமுகப்படுத்தி வைத்ததன் நோக்கமும்.

இன்று வலைப்பதிவுகள் இப்படிப் பல்கிப் பெருகியதற்கு ஏதோ ஒரு விதத்தில் நானும் ஆரம்பத்தில் ஒரு விதை போட்டேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றின் உள்ளடக்கதில் செறிவைக் கூட்டவேண்டியது அடுத்த கட்ட பணி. திசைகளை மீண்டும் துவக்கிவிடலாமா என்று கூட கை அரிக்கிறது. பார்ப்போம். இன்ஷா அல்லாஹ். நல்லதே நடக்கட்டும்.

***
ஒரு சீசனில் சென்னையில் 'மெட்றாஸ் ஐ' வராதவர்களைச் சல்லடை போட்டுத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. புத்தர் கடுகு வாங்கி வரச் சொன்ன கதைதான். அந்த மாதிரி ஆகிவிட்டது 8 போடாத வலைப்பதிவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. யாரைக் கேட்டாலும் நான் எட்டுப் போட்டாச்சே, நீங்க பார்க்கலையா என்கிறார்கள் என்னவோ ஓட்டுப் போட்டது போன்ற ஒரு களிப்புடன். அதுவும் தவிர எட்டுப்பேர் எழுதக்கூடிய நீளத்திற்கு நான் என்னுடைய ராமாயணத்தை எழுதிவிட்டதால், இன்னும் எட்டுப்பேரை அழைக்கத் தயக்கமாக இருக்கிறது. மிகவும் யோசித்து இந்த எட்டுப் பேருக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர்கள் வந்து எட்டுப் போட்டு எங்களை கெளரவிக்க வேண்டும். குட்டுப் போட்டாலும் ஏற்கத் தயார்:

மதுமிதா
ஆச்சரிய்மாக இருக்கிறதே, இன்னுமா உங்களை விட்டுவைச்சிருக்காங்க!
நிலா
சேவாலாயா அனுபவங்களை எழுதுவீங்கதானே?
(ரஜனி) ராம்கி
எழுதுங்க சும்மா அதிர்ற்றட்டும்!
ராகவன் தம்பி
வடக்கு வாசல் அனுபவங்கள், தில்லி தமிழ்ச் சங்க உரைகள் இவற்றில் இருந்தெல்லாம் எடுத்து எழுதுங்க
அண்ணா கண்ணன்
பட்டிமன்றத்தில்தான் கலக்கணுமா? இந்த வெட்டி மன்றத்திற்கும் வாங்க
உண்மைத் தமிழன்
பின்னூட்டப் பிரசினைகளிலிருந்து ஒரு மாற்றமா இருக்கும்ல?
உதயச் செல்வி
உதயா நீங்க எழுதி எத்த்னை நாளாச்சு. அப்பா கவிதை மாதிரி ஒரு 8 கவிதை வேண்டும்
பாலுமணிமாறன்
சிங்கை அனுபவங்களை, (இலக்கிய அனுபவங்களும் சேர்த்துத்தான்) எழுதுவீங்கள்ல?
அவர்களுக்காக விதி முறைகள் இன்னொரு தரம் இங்கே:

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும்

எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

வாங்க வாங்க.

Tuesday, July 03, 2007

எட்டினவரைக்கும் ஒரு எட்டு

அருணாவை என்னுடைய நலம் விரும்பும் நண்பர்களில் முக்கியமான ஒருவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இப்படி ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார் என நான் நினைத்ததில்லை. சங்கடம் என்னவென்றால் நான் என் சொந்த வாழ்க்கையைப் பற்றி பதிவுகளில் எழுதியதில்லை. எழுதுவது இல்லை என்று ஓர் தீர்மானத்துடன் இருந்தேன்.வலைப்பூக்களில் மட்டுமல்ல, எந்த ஊடகங்களிலும் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. இதுவரைக்கும் ஆறு பேர் என் கதைகளை எம்.பில், பட்டத்திற்காகவும் ஒருவர் முனைவர் பட்டத்திற்காகவும் ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் தவறாமல் செய்யும் ஒரு சடங்கு, சொந்த வாழ்க்கை பற்றிய தகவல்களைக் கேட்டு எழுதுவது. ஒரு படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே உள்ள உறவு அவனது படைப்புக்கள்தான், என் சொந்தக் கதை எதற்கு என்று அவர்களுக்குக் கூட மறுத்திருக்கிறேன். (ஏன் ஒரு எழுத்தாளனின் படைப்பை ஆராய அவனது சொந்த வாழ்க்கை ஏன் தேவைப்ப்படுகிறது என்று அதற்கு ஒரு பேராசிரியர் விளக்கமளித்து நீண்ட கடிதம் எழுதியிருந்தார்)ஆனால் அருணாவின் வேண்டுகோளுக்கு NO சொல்வது சிரமான காரியம். அவருடன் ஜெசிலா வேறு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எங்கள் குடியிருப்புதான் (Journalists' Colony) தாய்வீடு. அதாவது அவர் என் மகள் போல.

நான் என் சொந்தக் கதையை எழுதத் தயங்குவதற்குக் காரணம், என் வாழ்க்கையில் கடந்து போன முக்கியமான தருணங்களை விவரிக்கும் போது நான் பல பிரபலங்களின் பெயர்களைக் குறிப்பிட நேரும். அதைப் படிப்பவர்களில் சிலரேனும், அலட்டிக்கிறான், பிலிம் காட்றான் என்று எண்ணக் கூடும். எவ்வளவு பணிவாக எழுதினாலும், அகம்பாவம் தொனிப்பதாக சிலர் கருதக்கூடும்.நான், எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களின் மூலம், சில திருப்பங்களுக்கு, மாற்றங்களுக்கு, விதை போட்டிருக்கிறேன் என நிஜமாகவே நம்புகிறேன். நான்தான் செய்தேன் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவற்றில் எனக்கும் பங்குண்டு என்ற ஓரு மனநிறைவு இருக்கத்தான் செய்கிறது. அதை எழுதப் போனால் நான் பீற்றிக் கொள்வதாக எவரேனும் எண்ணக் கூடும்.என் வாழ்க்கை என்னால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படவில்லை.கணியன் பூங்குன்றன் சொன்னதைப் போல, நீர் வழிப்படும் புணை போல (ஆற்றில் மிதந்து செல்லும் கட்டை போல) அது போய்க் கொண்டிருக்கிறது.

தப்பான அபிப்பிராயங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வதென்றால் ஆசிப் மீரானின் எட்டுப் போலத்தான் எழுத வேண்டும். அந்த நகை(ச்சுவை) நடை நமக்குக் கை வராது.

இப்போதும் இந்தத் தயக்கங்களோடுதான் எழுதுகிறேன்.

***

அந்த நெடிய கூடத்தின் சுவர்களில், காந்தி, நேரு,படேல், மெளலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத், பாரதியார், வினோபாவே, வ.உ.சி எனப் பல புகைப்படங்கள் தொங்குகின்றன. அவற்றினிடையே புகைப்படமாக இல்லாமல், தைல ஓவியமாக, சுபாஷ் சந்திர போஸ், நிமிர்ந்து கொடிக்கு சல்யூட் செய்யும் படமும் உண்டு. கீழே கிராமபோனில் இசைத்தட்டு சுழன்று கொண்டிருக்கிறது.அம்மாவும், அம்மாவின் நெருங்கிய தோழியான கமலா சித்தியும் இசைத்தட்டிலிருக்கும் பட்டமாளோடு சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா மடியில் உட்கார்ந்திருக்கும் என்னை ஒரு கையால் பிடித்துக் கொண்டே, மற்றொரு கையால் தனது இன்னொரு தொடையில் தாளம் போட்டுக் கொண்டே பாடுகிறார். 'ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே..' நான் அம்மாவைப் போல என் தொடையில் தாளம் போட்டுப் பார்க்கிறேன்.சத்தம் வரமாட்டேன் என்கிறது.

அன்று அம்மாவும் கமலா சித்தியும் மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடிப் பாடிப் பழகுகிறார்கள். இசைத்தட்டின் முள்ளை குத்துமதிப்பாக ஒரு இடத்தில் வைத்து விட்டு அங்கு துவங்கும் வரியிலிருந்து ஆரம்பித்துப் பாடுகிறார்கள்.

மாலை, வெயில் இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்ரீவில்லிபுத்தூர் திருமக்குளக்கரையில், தாத்தா தனது மருத்துவமனையில் பயன்படுத்தும் கறுப்பு நிற மேஜையும், மேஜை அருகில் அவரது நாற்காலியில், வீட்டுச் சுவரில் மாட்டியிருந்த பாரதி படம் வைக்கப்பட்டு, பாரதிக்கு கையினால் நூற்கப்பட்ட ஒரு சிட்டம் மாலையாக சூட்டப்பட்டிருக்கிறது. தாத்தாவிற்கு அருகில் முன்வரிசையில் என்னையும் ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். அம்மாவைக் காணோம். என் கண்கள் அவர் எங்கே எனத் தேடிக் கொண்டிருக்கின்றன.

திடீரென்று அம்மாவும் சித்தியும்,மைக் முன் தோன்றி, ஆடுவோமே ... என்று ஆரம்பிக்கிறார்கள்.காலையில் கேட்ட அதே பாட்டு. நான் நாற்காலியிலிருந்து நழுவி இறங்கி ஓடிப் போய் அம்மா பக்கத்தில் அவருடன் ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். அம்மா, தனது உள்ளங்கையை என் புஜத்தில் வைத்து அழுத்திக் கொண்டு, ஆனால் குனிந்து என்னைப் பார்க்காமல். தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் முழுக்க என்னைப் பார்க்கிறது. நான் அவ்வப்போது நிமிர்ந்து அம்மாவைப் பார்க்கிறேன். ஆனால் அம்மா என்னைப் பார்ப்பதில்லை. நன்கைந்து பாடல்கள் பாடுகிறார்கள். பாடி முடித்ததும் சற்றே குனிந்து என்னை வாரி எடுத்துக் கொண்டு தன் தந்தையார் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குப் பக்கத்தில் வந்தமர்ந்து கொள்கிறார்கள்.

வீட்டுக்கு வந்ததும் அம்மாவைப் போல பாட முயற்சிக்கிறேன். என் மழலையில் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. ஆடுவோமே. ஆதுவோமே எனத் நெகிழ்ந்து குழைந்து வருகிறது. ராகமோ, சுருதியோ இல்லாமல் குரல் இழுத்த இடத்திற்கெல்லாம் ஓடுகிறது. ஆனால் அம்மா, முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, கை தட்டிக் கொண்டு பாட ஊக்குவிக்கிறார்.வரி எடுத்துக் கொடுக்கிறார்.

அப்படி ஐந்து வயதில் எனக்கு அறிமுகமானவர் பாரதியார். இன்றைக்கு வரைக்கும் அவரே எனக்கு குரு, வழிகாட்டி, நண்பன், விமர்சகன் எல்லாம்.

அம்மாவிற்குள் கடைசி மூச்சுவரை பாரதியார் இழையோடிக் கொண்டிருந்தார்.அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன், இரவு பத்து மணி வாக்கில், சென்னையிலிருந்த என்னை திருநெல்வேலியிலிருந்து தொலைபேசியில் அழைத்து, " இப்போ பட்டம்மா மாதிரியே ஒர்த்தி பாடறாளே கேட்டியோ, யாரு, புதுசா இருக்கே?" என்று நித்யஸ்ரீயைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசினார்.

குரு வழிகாட்டி, நண்பன் பட்டியலில், அம்மா போன பின்பு, பாரதியாரை அம்மா என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

***
ஜனவரி 25 1965. பள்ளிக்கூடத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் ஞாயிறுகளில் சந்தை நடக்கும் திலகர் திடலில் இருந்த இன்னொரு பெரிய ஊர்வலத்தோடு சேர்ந்து கொண்டு, மதுரை வடக்குமாசி வீதியை நோக்கி நகர்ந்தது.இந்தித் திணிப்புக்கு எதிரான கோஷங்களை முழங்கிக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தோம். உச்சி வெயில். கிருஷ்ணன் கோயில் தாண்டி கொஞ்ச தூரம் வந்திருப்போம், எங்களுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த யூ.சி.ஹைஸ்கூல் பசங்க திடீரென்று திரும்பி எங்களை நோக்கி திமுதிமுவெனெ ஓடி வரத் தொடங்கினார்கள்.நாங்களும் கலைந்து ஓடத் துவங்கிய போது, போலீஸ் வந்தது.ஓடிக் கொண்டிருந்தவர்களை அடிக்கத் தொடங்கியது. நான் அப்போது பள்ளியிறுதி வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாலும், அரை டிராயர்தான் அணிவது வழக்கம். கல்லூரிக்கு வரும் வரை முழுக்கால் சட்டை அணிந்ததில்லை. (கிரிக்கெட் மாட்ச்சிற்குப் போகிற தருணங்கள் விதி விலக்கு) போலீஸ் வெறிகொண்ட மாதிரி என்னை அடிக்கத் துவங்கியது. பாதுகாப்பில்லாமல் இருந்த என் இடது காலில் சதை கிழிந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. (அந்த 'வீரத் தழும்பு' இன்னமும் இருக்கிறது) என் வகுப்புத் தோழன், கண்ணன், என்னை இழுத்துக் கொண்டு, ராமாயணச் சாவடிக்கு அருகில் உள்ள அவன் வீட்டை நோக்கி ஓடினான். என்னால் வேகமாக ஓட முடியவில்லை. ஒரு காலை இழுத்துக் கொண்டு, அடிபட்ட நொண்டி நாய் போல விந்தி விந்தி ஓடினேன்.

அந்த நாள் வரை என்னை யாரும் அடித்ததில்லை. அப்பாவோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அடித்ததில்லை. நண்பர்களுடனான சண்டை அதிக பட்சம் சட்டையைப் பிடிப்பது வரைதான் போயிருந்திருக்கிறது. ஒரு மூர்க்கத்தனமான வன்முறையை அத்தனை நெருக்கத்தில் அன்றுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.வன்முறையைவிட அடிவாங்கிய அவமானம் மனதை உறுத்தியது. போலீஸ்காரர்களால் நடுத்தெருவில் ஒரு கிரிமினலைப் போலத் தாக்கப்பட்டதாக மனது மறுபடி மறுபடி குமைந்தது. ' அப்படி என்ன தவறு செய்து விட்டேன், என்ன தவறு செய்தேன்னென்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேன். கால் காயத்தைச் சுற்றி வீங்கி, அது விண்,விண் என்று வலிக்கத் தொடங்கியிருந்தது, சம்பவத்தை மறக்கவிடாமல் செய்தது.

மறுநாள் குடியரசு தினம். அப்பா சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டு நாள்களிலும் வீட்டில் தேசியக் கொடி ஏற்றி வைப்பார்.அதற்கென்று வீட்டு மொட்டை மாடியில் ஒரு கம்பம் இருந்தது. அன்று அவர் எழுவதற்கு முன், நான் எழுந்து, பாதி கிழிந்திருந்த ஒரு குடையை முழுசாகக் கிழித்து, கறுப்புக் கொடி செய்து, மொட்டைமாடிக்கு விந்தி விந்தி ஏறிப் போய் அந்தக் கம்பத்தில் ஏற்றிவிட்டேன்,சிறிது நேரத்தில் அப்பா கொடி ஏற்ற வந்துவிட்டார். மேலே கறுப்புக் கொடி பறக்கிறது. " என்னடா இது?" என்றார். நான் பதில் சொல்லாமல் கல்லுளிமங்கன் போல முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு நின்றேன். " அதை கீழே இறக்குடா" என்றார். நான் அசையவில்லை. அவர் கொடியின் கயிற்றுக்குப் பக்கத்தில் வரும்முன் நான் பாய்ந்து அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அவர் ஒன்றும் பேசாமல் திரும்பி விட்டார்.

என்னை இழுத்துத் தள்ளிவிட்டுக் கொடியேற்ற அவருக்கு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனாலும் அப்படி ஏதும் செய்யாமல் படியிறங்கிப் போனது அவரது பெருந்தன்மை.

அவரது வருத்தம் எனக்குப் புரிந்தது. சுதந்திரப் போராட்ட நாள்களில், மாநிலக் கல்லூரி மாணவனாக, ஜார்ஜ் கோட்டை மீது இந்தியக் கொடியை ஏற்ற முயன்று கைதாகி அலிப்பூர் சிறையில் சில காலம் இருந்தவர். அவர் அப்படிச் சிறையில் இருந்த போதுதான் அவரது அம்மா இரந்து போனார். அவர் தனது தாய்க்கு ஒரே மகன். அந்தக் கொடியேற்றத்திற்காக அவர் கொடுத்த விலை மிகப் பெரிது. இன்று அவரால் அவரது வீட்டிலேயே கொடி ஏற்ற முடியவில்லை.

***

தூத்துக்குடியில் ஒரு நூற்பாலை இருந்தது.(அப்போது அதன் பெயர் ஹார்வி மில், இப்போது மதுரா கோட்ஸ்) தினமும் காலையும் மாலையும் ஊரே திடுக்கிட்டு எழுவது போல சங்கு ஒன்றை ஒலிக்கச் செய்வார்கள். கிருபானந்த வாரியார் கந்த புராணம் சொல்ல வந்திருந்தார்.பத்து நாளாகக் கதை நடக்கிறது. தினமும் சங்கு ஊதப்படும் நேரத்தை அவர் கவனித்து வைத்திருந்திருக்க வேண்டும். சூரபத்மன் வதைப்படலம் சொல்லிக் கொண்டு வருகிறார், போர்க்களக் காட்சி. வீரபாகு எழுந்து போருக்கு அழைப்பு விடுத்து சங்கு எடுத்து ஊதுகிறான், எப்படித் தெரியுமா? என்று சொல்லி நிறுத்தினார். நூற்பாலை சங்கு ஒலிக்கிறது. அப்படி ஒரு special effects உடன் கதை சொன்னார்.

அந்தச் சங்கு, அவர் கதை, நான் படித்திருந்த இடதுசாரி தொழிற்புரட்சி நூல்கள் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்க 'நாத்திக வாசனையோடு' ஒரு கவிதை எழுதினேன். அதை என் நெருங்கிய நண்பனும் வகுப்புத் தோழனுமான முத்துப்பாண்டி குண்டு குண்டான அவனது கையெழுத்தில் படி எடுத்து 'எழுத்து' பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். நானும் அவனும் மாலை வேளைகளில் காரப்பேட்டை பள்ளிக்கு அருகில் இருந்த பொது நூலகத்தில் உட்கார்ந்து பத்திரிகைகளை மேய்கிற வழக்கம் உண்டு. அங்குதான் எழுத்துப் பத்திரிகையை முதன் முதலில் பார்த்தேன். சி.சு.செல்லப்பா, தன் உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் பணயம் வைத்து புதுக்கவிதையை ஒரு இயக்கமாக்க அதை நடத்திக் கொண்டிருந்தார்.தளைகளையெல்லாம் தகர்தெறிய வேண்டும் என்ற இளமையின் வேகத்தில் இருந்த எனக்கு, இலக்கணத்தை நிராகரிக்கும் புதுக்கவிதை என்ற கருத்தாக்கம் பிடித்திருந்தது.

ஒரு நாள் மாலை கல்லூரியிலிருந்து திரும்பி, சைக்கிளை ஸ்டாண்ட் போடுவதற்குள், அம்மா, கங்கிராட்சுலேஷன்ஸ்' என்று ஒரு போஸ்ட் கார்டை நீட்டினார். செல்லப்பா எழுதியிருந்தார். 'உங்கள் கவிதை கிடைத்தது. இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். ஒரு நல்ல கவிதையை வெளியிட்ட திருப்தி எனக்கு. தொடர்ந்து எழுதுங்கள்'. அம்மாவிற்கு பெருமை பிடிபடவில்லை. 'எத்தனை பெரிய எழுத்தாளர். மணிக்கொடி கோஷ்டி இல்லையோ? உன்னை மதிச்சு லெட்டர் போட்டிருக்காரே! அவருக்குப் பெருமையாம் உன் கவிதையை போட்டதில. என்னடா அப்படி எழுதின!' என்று மகிழ்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தாள். அப்பா வந்தவுடன் அவரிடமும் மறு ஒலிபரப்பு. அப்பா அந்தக் கார்டை வாங்கிப் பார்த்தார். அருகில் இழுத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அப்பா பெரிய படிப்பாளி. ஐந்து வயதில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த போது, அங்கிருந்த பென்னிங்டன் நூலகத்திற்கு அவர் போகும் போது என்னையும் அழைத்துப் போய், நூலகருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டுலில் உட்கார்த்தி வைத்துவிட்டு புத்தகம் தேடப் போய்விடுவார். ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவே நான் உட்கார்திருப்பேன். புத்தகம் படிப்பதும் எழுதுவதும், பெருமைக்குரிய செயல் என்ற எண்ணம் மனதில் விழுந்தது அந்தத் தருணத்தில்தான்.

அதே போல இன்னொரு பாராட்டையும் சொல்லியாக வேண்டும். எட்டாம் வகுப்புப் படிக்கும் போது ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்தி வந்தேன். ஒருநாள் காலையில் தினமணியில் ஒரு செய்தி படித்தேன். ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் கட்டிட வேலைக்காகத் தோண்டிய போது ஒரு தோல் பெட்டி நிறைய கரன்சி நோட்டுக்கள் கிடைத்ததாகவும், ஆனால் அவற்றைக் கரையான் அரித்திருந்ததாகவும் சொன்னது செய்தி. வெகுநேரம்வரை அந்த செய்தி மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. வகுப்பில் அமர்ந்திருக்கும் போது மனதில் 'கவிதை கொட்ட்த்' துவங்கியது. வகுப்பு பூகோள வகுப்பு. மத்தியதரைக் கடல் சீதோஷணத்தைப் பற்றி ஆசிரியர் விவரித்துக் கொண்டிருந்தார். நான் பின்பெஞ்சில் உட்கார்ந்து என் கையெழுத்துப் பத்திரிகைக்குக் அந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தேன். ஓசைப்படாமல் என்னருகில் வந்த அந்த ஆசிரியர் வெடுக்கெனெ அந்தக் கவிதையைப் பறித்தார். படித்துக் கொண்டே அவரது மேசையை நோக்கி நடந்தார். எனக்கு வெலவெலத்துவிட்டது. இன்று தொலைந்தோம் என்று நினைத்து நடுங்கிக் கொண்டிருந்தேன். அவர் என்னை மேசையருகே வரச் சொல்லி அழைத்தார். அதன் பின் அவர் சொன்னவை என்னால் மறக்க முடியாதவை. " கவிதை எழுதுவது என்பது கடவுள் சில பேரைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வரம். அப்படி வரம் வாங்கி வந்த ஒருவன் நம் வகுப்பில் இருக்கிறான்." என்று சொல்லிஅந்தக் கவிதையை என்னை உரக்கப் படிக்கச் சொன்னார். ஒரு நிமிடத்தில் நான் ஒரு ஹீரோ ஆகிவிட்டேன். என் கையெழுத்துப் பத்திரிகையின் சர்க்குலேஷன் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது1

அன்று அவர் மட்டும் என் நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல ஏதாவது சொல்லியிருந்தால் நான் அன்றே எழுதுவதை நிறுத்தி இருக்கக் கூடும்.

***
கிண்டி ராஜ்பவன் எதிரே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த என்னை, எதிரே மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சுப்ரமண்ய ராஜு ஓரங்கட்டி நிறுத்தச் சொன்னான். நானும் அவனும் அநேகமாக வாரத்திற்கு மூன்று முறையாவது, தி.நகரில் உள்ள இந்தியா காபி ஹவுஸ் எதிரில் உள்ள பஸ்ஸ்டாண்ட் காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்து கொண்டு இலக்கியம், எக்சிஸ்டென்ஷியலிசம் எனப் பல விஷயங்களை 'அரட்டை' அடிப்பதுண்டு. அவன் அப்போது சாவி ஆரம்பித்த பத்திரிகையிலும் எழுதிக் கொண்டிருந்தான். என் கதை ஒன்றையும் வாங்கிக் கொண்டு போயிருந்தான். அதைப் பற்றி ஏதேனும் சொல்லப் போகிறான் என்று நினைத்துக் கொண்டு அவனருகில் போனேன். " சாவி சார் உன்னை நாளைக்கு ஆபீசுக்கு வரச் சொன்னார்" என்றான் மொட்டையாக. " கதை பற்றிப் பேசவா?" அப்போது நாங்கள் எழுதும் கதைகளில் எத்தனை பெரிய ஆசிரியராக இருந்தாலும் எங்கள் அனுமதி இல்லாமல் கைவைக்கக் கூடாது எனப் பிடிவாதமாக இருந்தோம். அதற்காக அவர்கள் அலுவலகம் தேடிப் போய் சணடைகள் போட்டிருக்கிறோம். அந்த மாதிரி ஒரு சண்டை வீடு தேடி வருகிறதோ என நினைத்தேன். " அதெல்லாம் எனக்குத் தெரியாது, வரச் சொன்னார், போய்ப் பார்." " நீ நாளைக்கு அங்கிருப்பியா?" " ஆபீஸ் முடிந்ததும் வருவேன்"

மறுநாள் அமைந்தகரையில் அருண் ஹோட்டல் வளாகத்தில் அமைந்திருந்த சாவி அலுவலகத்திற்குப் போனேன். ராஜுவைக் காணோம். சற்று நேரம் காத்திருந்துவிட்டு, சாவி சார் அறைக்குள் போனேன். மிகுந்த உற்சாகமாக என்னை வரவேற்ற அவர், தனது பத்திரிகைக்கு ஏதேனும் எழுத வேண்டும் என்று சொன்னார். அவரே ஒரு யோசனையும் சொன்னார். வாரம் ஒரு பிரபலமான நபருக்கு 'நறுக்' என்றும், 'சுருக்' என்றும், ஒரு பகிரங்கக் கடிதம் எழுத வேண்டும். அந்த நிமிடத்திலேயே எனக்குத் தமிழன் என்று ஒரு புனைப் பெயரும் சூட்டினார்.

நான் சற்றுத் தயக்கத்துடன் என் கதையைப் பற்றிக் கேட்டேன். அது வந்துரும் சார் என்றார், காஷுவலாக. அதைச் சுருக்கவோ திருத்தவோ கூடாது எனவும், அப்படிச் செய்ய வேண்டி வந்தால் என் அனுமதி பெற வேண்டும் என்றேன். அவர் சொன்னார்: " சார் ஒரு எழுத்தாளனுக்குப் பெயர் கிடைப்பதும் பெயர் கெட்டுப் போவதும் அவன் எழுதும் கதையைப் பொறுத்தது. It is his funeral. நான் ஏன் கவலைப்பட வேண்டும்?"

நான் அரைமனதாக எழுந்து கொண்டேன். அவரது அறைக்கதவைத் திறந்து வெளியே வர இருந்த நேரத்தில் அவர் சொன்னார்: " யார் வேணும்னாலும் கதை எழுதலாம்.மாலனும் எழுதலாம். ஆனால் மற்றதை எல்லாராலும் எழுத முடியாது. ஆனால் மாலனால முடியும். யோசிக்கிற ஆளு நீங்க, யோசிச்சுப் பாருங்க உங்களுக்கே தெரியும்".

அவர் முதல் சந்திப்பிலேயே என் மீது வைத்த நம்பிக்கை என்னை அசர வைத்தது. பகிரங்கக் கடிதங்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்டுரைகள், தலையங்கங்கள், உலக விவகாரங்கள், கேள்வி பதிலகள் (தமிழன் பதில்கள் என அவை வெளியாயின. ஒருநாள் ம.பொ.சி. போன் செய்து செங்கோல் பத்திரிகையில நான் தமிழன் என்ற பெயரில் எழுதியிரூக்கேன் தெரியுமா? என்று கேட்டார். தெரியாது, பெயரை மாற்றிக் கொள்ள வேண்டுமா? என்றேன். நீ எழுது ராஜா, நாந்தான் இப்ப எழுதலையே என்றார்) எனப் பல எழுதினேன். கதைகளும் கூட. ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்கள் சொன்னேன்.

சாவி இதழ் ஆரம்பித்து 52 வாரங்கள்- ஒரு வருடம்- முடிந்த போது சாவி 10 வாரங்கள் ஐரோப்பாவிற்குச் சுற்றுப் பயணம் கிளம்பினார். அதற்கு முன் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், சில வழக்கமான விஷயங்களுக்குப் பின், " நான் வெளிநாடு போயிருக்கும் போது நம் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை வகிக்கப் போகிறவரை இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன், அவருக்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்" எனச் சொல்லி என்னை அழைத்து அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். நான் திகைத்துப் போனேன். " சார்.. என்னால.." " முடியும் மாலன்,முடியும்" என்று தோளில் அழுத்தி உட்காரச் சொன்னார். அன்று வெள்ளிக் கிழமை. ஆபீசில் பூஜை முடிந்து, தேங்காய், பழம், பூ கொண்டு வந்து எடிட்டரிடம் கொடுப்பார்கள். அன்றும் கொண்டு வந்தார்கள். என்னைக் கையைக் காண்பித்து 'எடிட்டரிடம் கொடுங்கள்' என்றார்.

எனக்கு அப்போது முப்பது வயது கூட நிரம்பியிருக்கவில்லை.பத்திரிகை உலகில் முழு நேர அனுபவம் என்று எதுவும் கிடையாது.

திரும்பி வந்த பின் ஒருநாள், நாம் தில்லி போகிறோம் மாலன் என்றார். என்ன விஷயமாக என்று கேட்டேன். நான் புதிதாக இன்னொரு பத்திரிகை ஆரம்பிக்கிறேன். ரிஜிஸ்திரேஷனுக்கு மனுச் செய்யப் போகிறோம். அந்தப் பத்திரிகைக்கு நீங்கள்தான் ஆசிரியர் என்றார். நீங்க அடிக்கடி சொல்வீங்கள்ல, தமிழ்ப் பத்திரிகைகள் இளைஞர்களைப் பிரதிபலிக்கவில்லை என்று, இந்தப் பத்திரிகையை இளைஞர்கள் பத்திரிகையாகவே நடத்துங்கள் என்றார். ஆசிரியர் குழு கூட்டத்தில் தமிழ்ப்பத்திரிகைகள், திரும்பத் திரும்ப ஆறு எழுத்தாளர்களது தொடர்கதைகளையே மாற்றி மாற்றிப் பிரசுரித்து வருகின்றன (லஷ்மி, சுஜாதா, சிவசங்கரி, ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை, பி.வி.ஆர்) என நான் ஆசிரியர் குழு கூட்டங்களில் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
அந்தப் பத்திரிகைதான் திசைகள். அது தமிழ் எழுத்துலகிற்குப் பலவகையான திறமைகளை அறிமுகப்படுத்தியது. இன்று பிரபலமாக அறியப்படும் சில பெயர்கள் அந்த நர்சரியில் பயிரானவை. பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், நளினி சாஸ்திரி, போன்ற எழுத்தாளர்கள், சுதாங்கன் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் (முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் (இந்தியா டுடே) சாருப்பிரபா சுந்தர் (குங்குமம்) போன்ற பத்திரிகையாளர்கள், வசந்த், கல்யாண்குமார் போன்ற திரைப்பட இயக்குநர்கள், மருது, அரஸ் போன்ற ஓவியர்கள் எனப்பல உதாரணங்கள். அந்தப் பத்திரிகை தோன்றி, மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் அது இன்னும் பலரது நினைவில் தங்கிவிட்டது.

****


இப்போதைக்குப் பாதிக் கிணறு தாண்டியிருக்கிறேன். அடுத்த நாலு நாளை மறுநாள். அதாவது இந்த சுய புராணம்..... தொடரும்.