Friday, July 14, 2006

மகேஷுக்கு ஒரு 'ஓ!' போடுங்கள்

இன்று காலை இணைய இந்துவில் படித்த ஒரு செய்தி பெருமிதத்தையும், மனதில் ஒருவித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:

மகேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். தந்தை ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மகேஷ்தான் குடும்பத்தில் முதன் முறையாக முதுநிலை வரை படித்திருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரிக்கு அருகில் உள்ள 'அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கலை அறிவியல் கல்லூரியில் ( இந்தக் கல்லூரியின் பெயரை இப்போதுதான் நான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன்) முதுநிலை மாணவர் மகேஷ்.

அவர் மைக்ரோசாஃப்ட் அடுத்துக் கொண்டுவரவிருக்கும் இயக்கு தளத்திற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார்.(next generation operating system) BETA2 iBRO.net என்ற இந்த நுட்பம் நான்குமாத காலத்திற்குள், கல்லூரிப்படிப்பின் ஒரு புரஜக்ட் ஆக வடிவமைக்கப்பட்ட ஒன்று.

திறமைகள் எந்தெந்த மூலைகளில் எல்லாம் ஒளிந்து கிடக்கிறது பார்த்தீர்களா?

'உள்குத்து''சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது''போலிப் பின்னூட்டம்' போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, மகேஷ்க்கு ஒரு 'ஓ!' போடக்கூடாதா? வலைவாசிகள் என்ற முறையில் அது நம் கடமை இல்லையா?

மகேஷோடு, ஏழ்மை நிலையில் இருந்தாலும், மகனது திறமைகளை குடும்பத்திற்காக முடக்கிவிடாமல் உற்சாகப்படுத்திய அவரது தந்தைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.

மகேஷுடைய மின்னஞ்சல்: maheshbeta2@gmail.com

விவரங்களுக்கு: http://www.hindu.com/2006/07/14/stories/2006071416510100.htm