tag:blogger.com,1999:blog-8519549.post3417045358741050071..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: யாருக்கு வாக்களிப்பது?-3Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8519549.post-86177129500383937882009-05-07T09:21:00.000+05:302009-05-07T09:21:00.000+05:30வழவழா கொழகொழா.
பாஜக பற்றி சொல்லப் பட்ட இந்த எல்ல...வழவழா கொழகொழா. <br /><br />பாஜக பற்றி சொல்லப் பட்ட இந்த எல்லா ”வாதங்களுக்கும்” ஏற்கனவே பதில் தரப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். <br /> <br />பாஜகவும் சங்கபரிவாரமும் ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்று கூறுவது உண்மை தான். ஆனால் அது “ஒற்றைப் படை” சிந்தனை அல்ல. இந்துமதத்தின் பன்முகத்தன்மை அத்தனையும் ஏற்றுக் கொண்டு அதில் ஆன்மிக ரீதியாக ஒருமையையும், சமூக ரீதியாக ஒற்றுமையையும் காண விழையும் சித்தாந்தம் அது. “செப்பு மொழி பதினெட்டுடையாள் அதில் சிந்தனை *ஒன்றுடையாள்*” என்று பாரதி சொன்னது போல. சொல்லப் போனால் இன,மொழி, பிராந்திய வாதங்கள் அனைத்தையும் தவிர்த்த, நெகிழ்ச்சித் தன்மையுடன் கூட, ஜனநாயக அடிப்படையிலான, இந்திய கலாசாரத்தில், மரபில் வேரூன்றிய அரசியல் சித்தாந்தம் இது ஒன்று தான். <br /><br />பாஜக பயங்கரவாதத்தை ஒழிக்க என்ன செய்தது என்பது சொத்தையான கேள்வி. <br /><br />காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம் என்ற எனது பதிவில் (http://jataayu.blogspot.com/2009/03/blog-post.html) சொன்னதை இங்கு கூறவிரும்புகிறேன் - <br /><br />”2004 முதல் 2008ன் இறுதி வரை இந்தக் கொடூரத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், இவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை வேட்டையாடித் தண்டிக்கவும் ஒரு உருப்படியான நடவடிக்கையைக் கூட, சிறிதளவும் உங்கள் அரசு எடுக்கவில்லை. 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு தான் உலுக்கினாற்போல விழித்துக் கொண்டு அடிப்படையான பாதுகாப்பு உள்கட்டமைப்பு விஷயங்களைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிக்கிறது அரசு. எத்தகைய கிரிமினல்தனமான மெத்தனம்!<br /><br />ஆனால் இந்தத் தேர்தல் பிரசாரத்தில், தீவிரவாத்தைப் பற்றி எழும் ஒவ்வொரு விவாத்த்திலும், இதற்கு முன்பு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாராளுமன்ற தாக்குதல் நடக்கவில்லையா? கண்டஹார் விமானக் கடத்தல் நடக்கவில்லையா என்பதையே மொண்ணைத் தனமாகக் கேட்கிறீர்களே, இதற்கு என்ன பொருள்? அப்போது சில இந்தியர்கள் மாண்டார்களே, இப்போது அதைப் போல 10 மடங்கு இந்தியர்கள் தான் மடிந்திருக்கிறார்கள்..நீங்களூம் கொஞ்சம் செத்துப் போனால் தான் என்னவாம் என்று மக்களைக் கேட்கிறீர்களா? அதுவும், பாராளுமன்றத் தாக்குதலுக்காக மரண தண்டனை விதிக்கப் பட்ட அப்சலின் தண்டனையை நிறைவேற்றக் கூட வக்கில்லாத ஒரு அரசின் சார்பாக? ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்ட முகமது ஹனீஃபின் குடும்பத்தினரை டிவியில் பார்த்து “அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கம் வரவில்லை” என்று தழுதழுத்த குரலில் உருக்கமாக சொன்னீர்கள். ஆனால் இந்தத் தீவிரவாத்த் தாக்குதல்களில் தங்கள் துணையை, குழந்தைகளை, சுற்றத்தாரை, நண்பர்களை இழந்த இந்தியக் குடிமக்களான தாயருக்கும், தந்தையருக்கும், மக்களுக்கும் அதே போன்று அழுத்தமாக ஆறுதல் சொல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? உங்களுக்கே வெளிச்சம். ஆனால் இதெல்லாம் இந்த்த் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மறந்து விடவில்லை என்பது நினைவிருக்கட்டும்.”ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-88819761807663237182009-05-07T08:08:00.000+05:302009-05-07T08:08:00.000+05:30ஓ! ஒரு கப் காபிக்குள் இத்தனை சமாசாரங்கள் இருக்கிறத...ஓ! ஒரு கப் காபிக்குள் இத்தனை சமாசாரங்கள் இருக்கிறதா? அடியேன் அறியேன்<br /><br />அந்த உதாரணத்தைக் கை விடுகிறேன்.<br /><br />பழைய உதாரணத்தையே வைத்துக் கொள்ளலாம்: இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்<br /><br />மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-85425825507089027232009-05-06T18:40:00.000+05:302009-05-06T18:40:00.000+05:30உங்கள் தர்க்கத்தில் ஒரு தவறு இருப்பதை எல்லோரும் கா...உங்கள் தர்க்கத்தில் ஒரு தவறு இருப்பதை எல்லோரும் காண்பார்கள்.<br />கும்பகோணம் டிக்ரி காஃபி நூறு சதவிகிதம் பீபெர்ரி காபிப்பொடி. அசல் காஃபி. ப்ரூ நகல்தான். 60 சதவிகிதம் மலிவுச் சரக்குக் காஃபி பொடியும் 40 சதவிகிதம் சிக்கரியும் கலந்தது. பா.ஜ.க. கும்பகோணம் டிக்ரி காஃபி என்பது அறிதலா?Unknownhttps://www.blogger.com/profile/12846942055995632638noreply@blogger.com