tag:blogger.com,1999:blog-8519549.post111121792324930417..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: கிறித்துவமும் பெண்களும்Unknownnoreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8519549.post-1138731086247637302006-01-31T23:41:00.000+05:302006-01-31T23:41:00.000+05:30எல்லா மதங்களுமே மனித-கடவுள் உறவை கட்டுப்படுத்துகின...எல்லா மதங்களுமே மனித-கடவுள் உறவை கட்டுப்படுத்துகின்றன. இதில் ஆண் பெண் என்ற பேதமில்லை. கடவுளையும் அவர் சார்ந்த கொள்கை, நம்பிக்கைகளை வறையறுப்பதே ஒரு மூடநம்பிக்கையாகத்தான் இருக்க முடியும். <BR/><BR/>அண்மையில் கத்தோலிக்க திருச்சபை தன் நம்பிக்கை கோட்பாட்டில் ஒரு (பெரிய) மாற்றம் கொண்டுவந்துள்ளது. 'லிம்போ' எனப்படும் பரலோகத்திற்கு மாற்று இடம் ஒன்று இருப்பதாக நம்பப்பட்டுவந்தது இப்போது அது இல்லை (http://cvalex.blogspot.com/2006/01/limbo-gonemany-more-to-go.html)<BR/><BR/>இதைப்போல பல மாற்றங்களை அதன் வாழ்நாளில் செய்துள்ளது...இன்னும் செய்யும் என்பது என் நம்பிக்கை.<BR/><BR/>//அன்னை தெரசாவிற்கு அளிக்கப்பட்ட மரியாதை கூட (என்ன பட்டம் குடுத்தார்கள் என்று நினைவில்லை) மிக தாமதமாக, உலக மக்களின் அழுத்தத்திற்கு பிறகே தரப்பட்டது. //<BR/><BR/>இது உண்மையாகத்தெரியவில்லை. இவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. இருந்தாலும், அன்னையை புனிதராக (இந்தப்பட்டம்தான் வழங்கப்படைருக்கிறது) கருத நாம் யாரையும் கேட்கத் தேவையில்லை.<BR/><BR/>மாலன்: 'Immaculate Conception of Mary' என்பதற்கு 'ஜென்ம பாவமில்லாமல்(original sin) உற்பவித்த மரியாள் எனப்பொருள். அதாவது மரியாள் பிறக்கும்போதே (மற்றவர்கள் போலல்லாது) பாவமற்றிருந்தாள் என்பதே பொருள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111395484334039812005-03-21T14:28:00.000+05:302005-03-21T14:28:00.000+05:30இயேசு தன்னுடைய பல சீடர்களிடமிருந்து 12 அப்போஸ்தலர்...இயேசு தன்னுடைய பல சீடர்களிடமிருந்து 12 அப்போஸ்தலர்களை ஆண்களாக இருக்குமாறு தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தெளிவாக தெரியவில்லை..ஆனால் அன்றைய சமுதாய சூழலில் நாடோடியாக பல இடங்களுக்கு சுற்றி போதனை செய்யும் போது எப்போதும் உடனிருக்க ,நினைத்த இடத்தில் தங்க பெண்களுக்குள்ள சிரமங்கள் காரணமாக கொள்ளப்பட்டிருக்கலாம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111325959547646242005-03-20T19:09:00.000+05:302005-03-20T19:09:00.000+05:30ரவி சீனிவாஸின் கருத்துகளோடு பெருமளவு ஒத்துப் போகிற...ரவி சீனிவாஸின் கருத்துகளோடு பெருமளவு ஒத்துப் போகிறேன். உலகின் எல்லா மதங்களுமே பெண்களுக்கு எதிரானவைதான் என்பது தொடர்ந்து நிருபணமாகிவருகிறது. எங்கோ கவிதையில் படித்தது, என்னவாய் இருந்தாலும், ஒரு கிறிஸ்துவ பெண் போப் ஆக முடியாது. ஒரு இஸ்லாமிய பெண் மெளல்வியாக முடியாது. ஒரு இந்து பெண் மதத்தலைவி ஆக இயலாது. (இதில் எனக்கு மாற்றுக்கருத்துகளுண்டு) கிறிஸ்துவ அடிப்படைவாதத்தினைப்பற்றி ஏற்கனவே, பத்ரியின் பதிவில் எழுதியிருக்கிறேன். அன்னை தெரசாவிற்கு அளிக்கப்பட்ட மரியாதை கூட (என்ன பட்டம் குடுத்தார்கள் என்று நினைவில்லை) மிக தாமதமாக, உலக மக்களின் அழுத்தத்திற்கு பிறகே தரப்பட்டது. அடிப்படைவாத கிறிஸ்துவம் தான் இன்றைக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அரசியல் சக்தியாய் உருவெடுத்துள்ளது என்பது இப்பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும், மிக அபாயகரமான தகவல். கூடுதல் தகவலாய், இந்தியா வந்துப்போன கண்டலீசா ரைஸ் ஒரு பாதிரியாரின் மகள் என்று எங்கோ படித்த நினைவு. <BR/><BR/>[இதற்காக நான் மாதா அமிர்தானந்தமாயியை எல்லாம் மதத்தலைவி, ஆன்மிக குரு என்றெல்லாம் சொல்லவில்லை, மாதாவினைப் பற்றி ஏற்கனவே பால் சக்கரியா, தெஹல்காவில் கிழித்துவிட்டார் ;-)]Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111240731878917252005-03-19T19:28:00.000+05:302005-03-19T19:28:00.000+05:30i dont think that church, particularly the catholi...i dont think that church, particularly the catholic church will undergo such a change soon.<BR/>the church condemns abortion, opposes distribution of condoms<BR/>and suggests abstience as a solution to AIDS.it is hand in glove with conservative governments on many such issues.<BR/>Catholics for Free Choice a group which questions the church's stand on abortion has been severly criticised by church and church supporters.moreover church enjoys the status of a state in the UN.It<BR/>has influenced the stand of some<BR/>countries on cloning.it may give some space to women but that will<BR/>be a restricted space.ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111236062719580522005-03-19T18:11:00.000+05:302005-03-19T18:11:00.000+05:30இது வார்த்தைப்பிரயோகங்களில் உள்ளது. இயேசு தெரிந்தெ...இது வார்த்தைப்பிரயோகங்களில் உள்ளது. இயேசு தெரிந்தெடுத்த பன்னிரண்டு பேருமே ஆண்கள் தாம். ஆனால் அவர் ஒருமுறை கல்லெறிதலிலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லப்பட்ட மதலேன் மரியாள் உட்பட அவர்மேல் விசுவாசம் கொண்ட பெண்கள் இருந்தார்கள். அவர் இறக்கும்போது கடைசிவரை இருந்த ஆண் என்றால் அது இயேசுவால் தெரிந்தெடுக்கப்பட்ட அருளப்பர் மட்டுமே. மதலேன் மரியாளையோ மற்றவர்களையோ இயேசுவின் சிஸ்யைகளாகச் சொல்வதில்லை.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111234732188482332005-03-19T17:48:00.000+05:302005-03-19T17:48:00.000+05:30இங்கே மாலன் பதிவு..., அருணா பதிவு இரண்டும் சேர்ந்த...இங்கே மாலன் பதிவு..., அருணா பதிவு இரண்டும் சேர்ந்து குழப்புகின்றன. இயேசுவுக்கு பெண் சீடர்கள் உண்டா, இல்லையா? மாலன் இல்லை என்கிறார். அருணா உண்டு என்கிறார். யாராவது தௌதவு படுத்துங்கள்!<BR/><BR/>- ரமேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111228946820994552005-03-19T16:12:00.000+05:302005-03-19T16:12:00.000+05:30நேற்றுதான் யூ பத்திரிகைக்காக ஒரு கிறிஸ்துவ பாதிரிய...நேற்றுதான் யூ பத்திரிகைக்காக ஒரு கிறிஸ்துவ பாதிரியாரிடம் "பெண்களும் கிறிஸ்துவமும்" பற்றி பேசிக்கொண்டிருந்தேன் :-) அதனால் மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். <br /><br />அந்தப் பாதிரி, Church of South India பிரிவினைச் சார்ந்தவர். அவர்கள் பிரிவு கிறிஸ்துவத்தில் பெண்களுக்கு மிக மதிப்புண்டு என்று நிலை நாட்ட மிகவும் முயன்றார். அவர் கூற்றுபடி ஓரளவு இந்த CSI பிரிவு மதத்தினரில் பெண்கள் பிஷப் கூட ஆகலாம் எல்லா பூஜையிலும் கலந்து கொல்ளலாம்; வழி நின்று நடத்தலாம். தற்போது இந்த தென்னிந்திய வட்டாரத்திற்கு முழுமைக்கும் பொது செயலாளராக ( General secretrary) இருப்பது ஒரு பெண் பாதிரிதான். இந்த அமைப்பை Synod என்று சொல்லுகிறார்கள். இங்கு பொது செயலாளருக்குதான் பொதுவாக நிர்வாக பொறுப்புகள். ஆனால் தலைமை அதிகாரி ( CEO) பதவியில் இருப்பது ஒரு ஆண் பிஷப். ஏனென்றால் இந்தப் பொறுப்பில் ஒரு பிஷப்தாம் இருக்க முடியுமாம். பெண் பிஷப்புகள் தற்போது இல்லாததால் அவர்கள் CEO ஆக தற்போது இல்லை என்றார். ஆனால் பெண்கள் பிஷப்பாக வர தடையேதும் இல்லையென்பதால் பிற்காலத்தில் CEO கூட ஒரு பெண்ணாக இருக்கலாம் என்றார்.<br /><br />இவர் கூறியதில் இன்னும் சில சுவாரசியமாக இருந்தன. ஆரம்பத்தில் கடவுளை ஆண் என்றுதான் குறிப்பிட்டு வந்தனர். ( Father என்று) ஆனால் தற்போது Common Parent பெற்றோர் என்று தொழுகைகளில் குறிப்பிடுகிறார்களாம். அதேபோல் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைபட்டபோது, ஆண்கள் ஓடிவிட்ட நிலையில் கடைசி வரை கூட இருந்தது பெண் சிஷ்யைகள்தாம். பின்னர் அவர் உயிர்த்தெழுந்ததி ஓடிவந்து அறிவித்ததும் மேரி மேக்டலின் என்ற பெண்ணே. அதேபோல் இன்று சர்ச் தொழுகைகளில் Kingdom of God என்று சொல்வதில்லையாம். பதிலாக Reign of God என்று பொதுவாக சொல்கிறார்களாம். <br /><br />இவர் சொல்வதிலிருந்து ஒன்று புரிகிறது. மதப் பழக்கங்கள், செயல்பாடுகள், கொள்கைகள் காலத்திற்கேற்ப மாறி வந்துள்ளன. ஆணாதிக்கம் இருந்த கடந்த காலத்தில் கடவுள் ஆணாக பாவிக்கப்பட்டார். இப்போது "பெற்றோராக" கருதப்படுகிறார். <br /><br />பொதுவாக எல்லா மதத்திலுமே அந்தந்த கலாசார, காலத்தின் தாக்கங்கள் பெரிதும் இருந்தன; இருக்கின்றன.<br /><br />அருணாAruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111224845483520982005-03-19T15:04:00.000+05:302005-03-19T15:04:00.000+05:30வி ஹெச் பி தலைவர் மணியனின் கருத்துக்கும் மாலனின் க...வி ஹெச் பி தலைவர் மணியனின் கருத்துக்கும் மாலனின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111222263912571372005-03-19T14:21:00.000+05:302005-03-19T14:21:00.000+05:30//பிராடஸ்டண்ட், பெந்தொகோஸ் சபை போன்றவைகளில் இந்த ம...//பிராடஸ்டண்ட், பெந்தொகோஸ் சபை போன்றவைகளில் இந்த மாதாந்திர தொந்தரவுகள் பெண்கள் சர்சுக்கு போவதை தடுப்பதில்லை. //<BR/><BR/>கத்தோலிக்கமும் தடுப்பதில்லை. சொல்லப்போனால் மாதாந்திர தொந்தரவைப்பற்றி திருச்சபை எதுவுங் கதைப்பதில்லை என்றே நினைக்கிறேன். பெண்களை தடுப்பதற்கு ஒருபோதும் அதை அவர்கள் கோட்பாடு ரீதியாக கருவியாய்ப் பாவிப்பதில்லை. மாறாக மாலன் சொன்ன வாதம் தான் வலுவானது. அதாவது இயேசு தன் சீடர்களைத் தெரிவு செய்ததிலிருந்து அதன் விளக்கத்தைத் தொடங்குகிறார்கள். மேலும் மாதாவை வணக்கத்துக்குரியவர் அல்லர் என்ற கோட்பாட்டை இன்றளவும் போதிக்கிறார்கள். (ஆனால் மக்களுக்கு "வணக்கத்துக்குரியவரல்லர் ஆனால் மன்றாடப்படக்கூடியவர்" என்பதற்கான வித்தியாசம் இன்னும் பிடிபடவில்லை. இயேசுவை வணங்குகிறார் களோ இல்லையோ மாதாவை வணங்குவார்கள்)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1111221597112351812005-03-19T14:09:00.000+05:302005-03-19T14:09:00.000+05:30நல்ல பதிவு மாலன்! கருக்கலைப்புப் பற்றி அன்னை திரேச...நல்ல பதிவு மாலன்! கருக்கலைப்புப் பற்றி அன்னை திரேசா கொண்டிருந்த நிலைப்பாடு போன்றவற்றையும் சேர்த்து இன்னும் முழுமையான ஒரு நீண்ட கட்டுரையை எதிர்பார்க்கிறேன். மேலும் கிறிஸ்தவர்கள் என்று பொதுமைப்படுத்தாமல் கத்தோலிக்கத் திருச்சபை என்று வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். நீங்கள் கூறியவை கத்தோலிக்கத் திருச்சபை பற்றியது. ஏனைய கிறிஸ்தவ கிளை அமைப்புக்களையும் விமர்சனத்துக்குட்படுத்த வேண்டும். அத்தோடு எப்படி தன் பிடிவாதத்திலிருந்து ஓரளவாவது திருச்சபை இறங்கி வந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டலாம். படிப்படியான மாற்றங்களைச் சுட்டுவதன் மூலம் (நற்கருணை அளிக்க கன்னியாஸ்திரிகளை அனுமதித்து இன்று குடும்பப் பெண்களை அனுமதிக்குமளவுக்கு வந்த மாற்றம்) எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றம் பற்றிய விவாதத்துக்கு அது துணையாயிருக்கும்.<BR/><BR/>மதங்கள் என்பதே பெண் விசயத்தில் ஒரே மாதிரியான பார்வை கொண்டவை தான். அதன் அடக்குமுறை வடிவங்களும் தளங்களும் வேறுபடும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com